இளங்கீரனார்சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது 18 பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அகநானூறு 3, 225, 239, 289, 299, 361, 371, 395, 399, குறுந்தொகை 116, நற்றிணை 3, 62, 113, 269, 308, 346 எண் கொண்ட பாடல்களாக அவை அமைந்துள்ளன. அனைத்தும் அகப்பொருள் பாடல்கள். இவற்றுள் குறுந்தொகைப் பாடல் ஒன்று மட்டும் குறிஞ்சித்திணைப் பாடல். ஏனையவை பாலைத்திணைப் பாடல்கள்.
பொறையன், திதியன், சோழர் ஆகியோரைப் பற்றி இவர் தமது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.
சோழரின்உறந்தைப் பெருந்துறை அறல் என்னும் ஆற்றுமணல்-படிவு போல கூந்தலை உடையவளாம் தலைவன் விரும்பும் காதலி.[1]
மரையா என்னும் காட்டுமான்-ஆட்டை அடித்துப் புலி உண்ட மிச்சத்தை எருவைக் கழுகு தன் பெண்கழுகுக்கு கொண்டு வந்து தரும் காட்டை நினைத்த தலைவன் மனைவியை விட்டுப் பிரியாமல் நின்றுவிடுகிறானாம்.[2]
இவரது பாடல்களில் அரிய பல பழமையான சொல்லாட்சிகள் காணப்படுகின்றன. இதனாலும், உதியன் அரசனைக் குறிப்பிடுவதாலும் இவர் காலத்தால் முந்திய புலவர்களில் ஒருவர் எனத் தெரியவருகிறது.
பழஞ்சொல்
அருமுனை இயவு - போர்க்களம்
ஆனாது கவரும் - இடைவிடாது
எல்லையும் இரவும் – பகலும் இரவும்
ஐ மென் தூவி – வியப்புக்கு உரிய – தொல்காப்பிய உரிச்சொல்