இந்தியப் பெண் புரட்சியாளர் From Wikipedia, the free encyclopedia
இலட்சுமி இந்திரா பாண்டா (Laxmi Indira Panda) ஓர் இந்தியப் புரட்சியாளர் என்று அறியப்படுகிறார்.[3][4] நேதாச்சி சுபாசு சந்திர போசின் இந்திய தேசிய இராணுவத்தின் இளைய உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[5] ஐஎன்ஏ எனப்படும் இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றிய ஒரே ஒடியா பெண்மணி இலட்சுமி இந்திரா பாண்டா மட்டுமே.[2] என்பது இவருக்குரிய சிறப்பாகும்.
இலட்சுமி இந்திரா பாண்டா Laxmi Indira Panda | |
---|---|
பிறப்பு | இலட்சுமி பாண்டா 1930 யங்கோன் அருகில், மியான்மர்[1] |
இறப்பு | அக்டோபர் 7, 2008 |
தேசியம் | இந்தியர் |
அமைப்பு(கள்) | இந்தியத் தேசிய இராணுவம் |
அரசியல் இயக்கம் | நாடு கடந்த இந்திய அரசு |
வாழ்க்கைத் துணை | காகேசுவர் பாண்டா (1951)[2] |
விருதுகள் | தேசிய சுதந்திர சைனிக் விருது (2008)[1] |
இலட்சுமி இந்திரா பாண்டா ஜான்சி ராணியின் படைப்பிரிவில் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தார், இவருக்கு 14 வயதாக இருந்தபோது, இந்தியாவில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராகப் போராடினார்.[2]
2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இலட்சுமி இந்திரா பாண்டா இறந்த பிறகு இவரது நினைவாக செய்ப்பூரில் ஒரு சிலை நிறுவ ஒடிசா அரசு அறிவித்தது [6]
2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதியன்று இவருக்கு தேசிய சுதந்திர சைனிக் சம்மான் வழங்கப்பட்டது. இவ்விருது இந்தியாவில் ஒரு சுதந்திரப் போராட்ட வீரருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த பட்டமாகும்.[1]
2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி பாண்டா, நீண்டகால நோயினால் தில்லி எய்ம்சு மருத்துவமனையில் இறந்தார்.[7] முழு அரசு மரியாதையுடன் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ஒரிசா காவல்துறை சார்பில் இவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.[6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.