![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cf/Sri_Lankan_Parliamentary_Election_2010.png/640px-Sri_Lankan_Parliamentary_Election_2010.png&w=640&q=50)
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010
From Wikipedia, the free encyclopedia
2010 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இலங்கையின் 14வது நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 2010, ஏப்ரல் 8 இல் இடம்பெற்றது[1]. 2010 பெப்ரவரி 10ம் நாள் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச 13வது நாடாளுமன்றத்தைக் கலைத்தார். வேட்பு மனுக்கள் பெப்ரவரி 19 இலிருந்து பெப்ரவரி 26 வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன[1]. 14,088,500 இலங்கையர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். 30 ஆண்டுகள் நீடித்த ஈழப்போர் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுத்தேர்தல் இதுவாகும்.
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இலங்கை நாடாளுமன்றத்துக்கான அனைத்து 225 தொகுதிகளுக்கும் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
இத்தேர்தலில் முக்கிய கட்சிகள் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, முக்கிய எதிர்க்கட்சி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி, இலங்கை தமிழரசுக் கட்சி, மற்றும் சனநாயகத் தேசியக் கூட்டணி ஆகியவையாகும்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி இத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று வெற்றியீட்டியது. நாடாளுமன்றத்துக்கான மொத்தம் 225 இடங்களில் அக்கட்சிக்கு 144 இடங்கள் கிடைத்தன. இது 2004 தேர்தலிலும் பார்க்க 39 இடங்கள் கூடுதல் ஆகும். முக்கிய எதிர்க் கட்சிக் கூட்டணி ஐக்கிய தேசிய முன்னணி 60 இடங்களைக் (22 இடங்கள் குறைவு) கைப்பற்றியது. தமிழர் கட்சி இலங்கை தமிழரசுக் கட்சி 14 இடங்களை எடுத்தது. இது சென்ற தேர்தலில் 22 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. முதற் தடவையாகப் போட்டியிட்ட சனநாயகத் தேசியக் கூட்டணி (டிஎன்ஏ) 7 இடங்களைக் கைப்பற்றியது[2][3].
1948 ஆம் ஆண்டில் இலங்கை விடுதலை பெற்ற பின்னர் நடந்த தேதல்களில் இம்முறையே மிகக்குறைந்தளவு பேர் பாவ்வளித்துள்ளார்கள்[4].
கும்புறுப்பிட்டி, மற்றும் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதிகளில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகளை அடுத்து அத்தொகுதிகளில் ஏப்ரல் 20 இல் மீள் வாக்கெடுப்பு இடம்பெற்று இறுதி முடிவுகள் ஏப்ரல் 21 இலேயே அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன.