இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்பம்
From Wikipedia, the free encyclopedia
1796 – 1948 வரை இலங்கையை பிரித்தானியர் ஆட்சி செய்தனர். பிரித்தானிய முடியின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை நேரடியாக வருவதற்கு முன்பு பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தக நிறுவனமே இலங்கையை தனது கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தது. பிரித்தானியக் கிழக்கிந்திய வர்த்தகக் நிறுவனம் கீழைத்தேய நாடுகளில் கேந்திர முக்கியத்துவம் மிக்கதாக விளங்கிய இலங்கையைக் கைப்பற்றிக் கொள்ளப் பல்வேறு காரணிகள் ஏதுவாக அமைந்திருந்தன.