![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c6/The_Hindu_God_Revanta_and_Companions_LACMA_M.73.87.1_%25281_of_9%2529.jpg/640px-The_Hindu_God_Revanta_and_Companions_LACMA_M.73.87.1_%25281_of_9%2529.jpg&w=640&q=50)
இரேவந்தா
இந்து சமயக் கடவுள் / From Wikipedia, the free encyclopedia
இரேவந்தா (Revanta) அல்லது இரைவதா (சமஸ்கிருதம்: रेवन्त, "புத்திசாலித்தனம்") இந்து சமயத்தைச் சேர்ந்த ஒரு சிறிய தெய்வமாகும். இருக்கு வேதத்தின்படி, இரேவந்தா சூரியனுக்கும் அவரது மனைவி சந்தியாவிற்கும் பிறந்த இளைய மகன். இமயமலையில் வனவாசிகளாக வாழ்வதாக நம்பப்படும் - இயக்கர்களைப் போன்ற - செல்வத்தின் கடவுளான குபேரனின் உதவியாளர்களாகவும், அவருடைய மறைந்திருக்கும் செல்வங்களைப் பாதுகாக்கும் குக்யர்களின் தலைவனாகச் சித்தரிக்கப்படுகிறார். [1] [2] இவரது உருவங்கள் மற்றும் சிற்பங்கள் பெரும்பாலும் வில் மற்றும் அம்புகளுடன் குதிரையில் வேட்டையாடுபவராக காட்டுகின்றன.
இரேவந்தா | |
---|---|
![]() கிழக்கு உத்தரபிரதேசத்தின் சாரநாத்தில் காணப்படும் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரேவந்தாவின் சிலை | |
வகை | குக்யர்கள் |
இடம் | இமயமலை |
ஆயுதம் | வாள் |
சகோதரன்/சகோதரி | அஸ்வினிகள், யமன், யமி, சனீஸ்வரன், தபதி மற்றும் வைவஸ்வதமனு |
இரேவந்தாவின் வழிபாடு குறிப்பாக மத்திய கால கிழக்கு இந்தியாவில் ( பீகார் மற்றும் வங்காளம் ) பொதுவானது. பல தொல்பொருள் கண்டுபிடிப்புகள் கி.பி 6 ஆம் நூற்றாண்டில் இவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வழிபாட்டு முறை இருந்ததைக் குறிக்கிறது.[3]