இராவணன்
From Wikipedia, the free encyclopedia
இராவணன் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணம் எனும் காவியம் கூறும் இலங்கையை ஆண்ட அசுர குல மன்னர் ஆவார்.[1] இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. பத்து முகங்களை உடையமையினால் தசமுகன் என்றும் அறியப்படுகிறார்.[2]
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
- மேலும் தகவல்களுக்கு: இராவணன் (பக்கவழி நெறிப்படுத்தல்)
இராவணன் | |
---|---|
18-ஆம் நூற்றாண்டின் இராவணன் சிற்பம், பிரித்தானிய அருங்காட்சியகம் | |
அதிபதி | இலங்கை வேந்தன் |
இடம் | இலங்கை |
சகோதரன்/சகோதரி | கும்பகர்ணன், வீடணன், சூர்ப்பணகை |
குழந்தைகள் | இந்திரஜித், அதிகாயன், அட்சயகுமாரன், பிரகஸ்தன், திரிசிரன், [[நராந்தகன் - தேவாந்தகன்]] (இரட்டையர்) |
நூல்கள் | இராமாயணம் |
பத்து பிரஜாபதிகளில் ஒருவரான புலஸ்திய முனிவரின் மகனான விஸ்ரவ முனிவருக்கும், அரக்கர் குல தலைவர் சுமாலியின் மகள் கைகேசிக்கும் பிறந்தவர்களே இராவணன், கும்பகர்ணன், வீடணன் மற்றும் சூர்ப்பனகை ஆவார்.
மேலும் இவர் சிவனுடைய பக்தனாக திருநீர் அணிவர் என்றும்,[3] சீதையை கவர்ந்து சென்றதனால் இராமனுடன் போரிட்டு மரணம் அடைந்ததாகவும் இராமாயண காவியம் கூறுகிறது.
சிவத் தலங்களில் சிவபெருமான் கயிலை மலை வாகனத்தில் வீதி உலா வருகையில், பத்துத் தலைகொண்ட இராவணன் கயிலை மலையை தாங்கும் வகையில் கயிலை மலை வாகனம் அமைந்திருக்கும்.