இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்
From Wikipedia, the free encyclopedia
இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயில் (Ramanathaswamy Temple) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டார். இக்கோயிலின் மூலவர் பெயர் ராமநாதசுவாமி, அம்மன் பெயர் பர்வத வர்த்தினி.
விரைவான உண்மைகள் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில், ஆள்கூறுகள்: ...
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 9.288106°N 79.317282°E / 9.288106; 79.317282 |
பெயர் | |
பெயர்: | இராமநாதசாமி திருக்கோயில் |
அமைவிடம் | |
அமைவு: | இராமேசுவரம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | இராமநாதசுவாமி: (சிவபெருமான்) - சீதையால் உருவாக்பப்பட்ட மணல் சிவலிங்கம் |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | ஏறத்தாழ 2100 -2600 ஆண்டுகளுக்கு முன் |
அமைத்தவர்: | முற்கால பாண்டியர்களின் மூதாதையர்கள் |
மூடு