இராஜாதிராஜ சோழன்
From Wikipedia, the free encyclopedia
இராஜாதிராஜ சோழன் முதலாம் இராஜராஜ சோழனின் பேரனும், இராஜேந்திர சோழனின் மகனும் ஆவான். இராஜேந்திர சோழனின் காலத்திலேயே மன்னனுடைய மூத்த மகனாக இல்லாவிடினும்[1] இவனுடைய திறமையைப் பாராட்டி இவனுக்கு இளவரசுப் பட்டம் வழங்கப் பட்டது. மேலும் தன் தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே தனக்கென்று மெய்க்கீர்த்திகளையும் பட்டங்களையும் பெறும் தனிச் சிறப்பும் இராஜாதிராஜ சோழனுக்கு அளிக்கப்பட்டது. இராஜாதிராஜன் தன் தந்தையுடன் சேர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவன் பதவிக்காலத்தில் சோழப் பேரரசின் தெற்கில் ஈழத்திலும், சேர பாண்டிய நாடுகளிலும், கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இராஜாதிராஜன் சேர, பாண்டிய நாடுகளுக்குப் படைகளை அனுப்பி அவற்றை அடக்கி பேரரசு சிதையாமல் பார்த்துக்கொண்டான். எனினும், வடக்கில் மேலைச் சாளுக்கியர்கள் இடைவிடாது தொல்லை கொடுத்தனர். இதனால், இராஜாதிராஜனுக்குப் பல தடவைகள் சாளுக்கியருடன் போரிட வேண்டியேற்பட்டது. இவ்வாறான ஒரு போரின்போது, துங்கபத்திரை ஆற்றை அண்டிய கொப்பத்தில் மேலைச்சாளுக்கிய மன்னன் முதலாம் சோமேசுவரனுடன் நடைபெற்ற போரில் இறந்தான்.
இராஜாதிராஜ சோழன் காலத்தில் சோழநாடு பொ.ஊ. 1030 | |
ஆட்சிக்காலம் | பொ.ஊ. 1012 - பொ.ஊ. 1044 |
பட்டம் | ராஜகேசரி |
தலைநகரம் | கங்கைகொண்ட சோழபுரம் |
அரசி | திரைலோக்கியம் உடையார் |
பிள்ளைகள் | இரண்டு மகன்கள்(பெயர்கள் அறியமுடியவில்லை) |
முன்னவன் | இராஜேந்திர சோழன் |
பின்னவன் | இராஜேந்திர சோழன் II |
தந்தை | இராஜேந்திர சோழன் |
பிறப்பு | கங்கை கொண்ட சோழபுரம் |
இறப்பு | பொ.ஊ. 1054 |