இரண்டாம் சூரியவர்மன்
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் சூரியவர்மன் (Suryavarman II ([Khmer]) (இறப்புக்குப் பின்னர்: பரமவிஷ்ணுலோகன்) கெமர் பேரரசை கிபி 1113 முதல் கிபி 1145-1150 வரை ஆண்ட பேரரசர். இவர் கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் என்ற சிவண் கோயிலைக் கட்டியவர். இது உலகின் மிகப் பெரும் கோயிலாகக் கருதப்படுகிறது. இவருடைய கட்டிடக் கலை, படையெடுப்புகள், சிறந்த அரசாங்கம் முதலியவற்றிற்காக இவரைக் கெமர் பேரரசின் சிறந்த அரசராக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இரண்டாம் சூரியவர்மன் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கம்போடிய அரசர்கள் | |||||||||
அங்கூர் வாட்டில் சித்தரிக்கப்பட்டுள்ள இரண்டாம் சூரியவர்மனின் படம் | |||||||||
ஆட்சிக்காலம் | 1113-1145/1150 | ||||||||
முன்னையவர் | முதலாம் தரணிந்திரவர்மன் | ||||||||
பின்னையவர் | இரண்டாம் தரணிந்திரவர்மன் | ||||||||
பிறப்பு | 11வது நூற்றாண்டு அங்கூர் | ||||||||
இறப்பு | 1145/1150 அங்கூர் | ||||||||
| |||||||||
தந்தை | சித்திந்திராதித்யன் | ||||||||
தாய் | நரேந்திரலட்சுமி | ||||||||
மதம் | இந்து சமயம் |
இந்த மன்னன் ஆட்சியில் தலைநகராக அமைந்த இடம் யசோதரபுரம் ஆகும். மிக நீண்ட, பரந்த நிலப்பிரதேசம் இவன் ஆளுகையில் இருந்தது. வடக்கே சம்பா, கிழக்குக் கடற்பிரதேசம், மேற்கு பகோன் , பர்மா, தெற்கு மலாய் தீபகற்பம் ஆகியவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கின்றான். இறந்த பின் பரமவிஷ்ணுலோகன் என்று பெயர் சூட்டப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டிருக்கின்றான்.