இரணகள்ளி
From Wikipedia, the free encyclopedia
இரணகள்ளி, அல்லது மலைக்கள்ளி, இது கள்ளி வகை தாவரம் ஆகும்.[1] Goethe plant,[2][3] இதன் இலைகள் மூலிகை மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. குறிப்பாக சிறுநீரகக் கற்கைளை கரைத்து, வெளியேற்றும் குணம் இரணகள்ளி இலைகளுக்கு உள்ளது.[4]இது சுமார் 1 மீட்டர் (39 அங்குலம்) உயரம் கொண்டது.[5] இதன் இலைகள் தடிமனாகவும், நீள் வட்டமாகவும், வளைந்தாகவும், விளிம்புகள் சிவப்பு நிறத்துடன் காணப்படும். இதன் தண்டுகள் சதைப்பற்றுடன் உருளை வடிவத்தில் காணப்படும். இதில் ஆண்டு முழுவதும் பூக்கள் வளரும்.[6]
![]() | இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி மலைக்கள்ளி கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
இத்தாவரம் மடகாஸ்கரை பூர்வீகமாகக் கொண்டது. மேலும் இக்கள்ளிச் செடிகள் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் இயற்கையாக வளர்கிறது. வெப்பமண்டல பசுமைமாறா மற்றும் வறண்ட இலையுதிர் காடுகள் மற்றும் மலை காடுகளில் உள்ள பாறைகளின் தளங்களைப் பற்றி வளர்கிறது. இது ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் , பெர்முடா, மக்ரோனேசியா , மஸ்கரேன்ஸ் , பிரேசில் , சுரினாம் , கலபகோஸ் தீவுகள், மெலனேசியா , பாலினேசியா மற்றும் ஹவாய் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது . [1] [8] ஹவாய் போன்ற பலவற்றில் , இது ஒரு களையாக கருதப்படுகிறது.[7][8][9]