இயேசுவின் திருமுழுக்கு
From Wikipedia, the free encyclopedia
இயேசு தனது பணி வாழ்வைத் தொடங்குவதற்கு முன் திருமுழுக்கு யோவானிடம் யோர்தான் நதிக்கரையில் திருமுழுக்கு பெற்றார். இந்நிகழ்வு மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் நற்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.[1][2] இயேசுவின் உருமாற்றம், சிலுவைச் சாவு, உயிர்த்தெழுதல், விண்ணேற்றம் ஆகியவற்றுடன் திருமுழுக்கும் அவரின் இந்து முக்கிய வாழ்க்கை நிகழ்வுகளில் ஒன்றாக கருதி அனேக திருச்சபைகளில் ஆண்டின் முதல் அல்லது இரண்டாம் வாரங்களில் அனுசரிக்கப் படுகிறது.[3] இந்நிகழ்வை கத்தோலிக்க திருச்சபையானது ஒளியின் மறைபொருள்களுள் ஒன்றாக ஜெபமாலையில் ஜெபிக்க பணிக்கிறது.