இன்கா பாலம்
தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் உள்ள ஒரு பாலம் / From Wikipedia, the free encyclopedia
இன்கா கயிற்றுப் பாலம் அல்லது கேஸ்வாசக்கா பாலம் (Inca rope bridge or Qeswachaka bridge ), தென் அமெரிக்காவின் பெரு நாட்டின், கன்காஸ் மாகாணத்தின், கியுகு மாவட்டத்தில், கூஸ்கோ பகுதியில் இரு மலைக்களுக்கிடையே பாயும் அபோரிமாக் ஆற்றின் மேல், இரு மலைகளை இணைக்க காய்ந்த புற்களை கயிறாக திரித்து, ஒவ்வொரு ஆண்டும் புதிய புற்களால் ஆன கயிறுகளைக் கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம் ஆகும். இப்பாலம் இன்கா பண்பாட்டுக் காலத்திலிருந்து 600 ஆண்டுகளாக கட்டப்படுகிறது. [1][2] அறிவு, திறமை மற்றும் சடங்காக கடந்த 600 ஆண்டுகளாக பாரம்பரியமாகத் தொடர்ந்து பெரு மக்களின் கூட்டு முயற்சியால் கேஸ்வாசக்கா பாலம் நிறுவப்படுவதால், யுனெஸ்கோ நிறுவனம், இப்பாலத்தை தனது பதிவேட்டில் 2013-இல் பதிவு செய்துள்ளது. [3]