இந்திய நாணய முறை
From Wikipedia, the free encyclopedia
இந்தியாவில் நாணயங்கள் பொது வருடத்திற்கு முன்னான முதலாம் நூற்றாண்டிற்கும் பொதுவருடம் ஆறாம் நூற்றாண்டிற்கும் இடையே தோன்றியது.[1] அதற்கும் முன்னர் மகாஜனபத நாடுகளான காந்தாரம், குந்தல தேசம், குருதேசம், பாஞ்சாலம், மகதம், சாக்கிய, சூரசேனம் மற்றும் செளராஷ்டிர[2] பேரரசுகள் தன் சொந்தப் பரிமாற்றத்திற்காக நாணயங்களை வெளியிட்டனர். இந்திய நாணயங்கள் மேற்காசிய நாணயங்களைப் போலல்லாமல் செம்பு மற்றும் வெள்ளி உலோகங்களில் முத்திரைகளுடன் உருவாக்கப்பட்டன. இவை கர்ஷ்பணாஸ் அல்லது பணா[3] என அழைக்கப்பட்டன. பொது வருடம் இரண்டாம் நூற்றாண்டிற்குப் பின்னர் இந்தோ இஸ்லாமிய[1] மற்றும் பிரித்தானிய இந்தியப் பேரரசு[4] காலகட்டத்திலும் நாணய முறைகள் உருவாகின.