இந்தியத் தேர்தல் ஆணையம்
From Wikipedia, the free encyclopedia
இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission of India) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் நிறுவப்பெற்ற ஒரு அமைப்பு. தன்னாட்சி பெற்ற இவ்வமைப்பு பகுதியளவு நீதித்துறை போன்றது. இதன் பணி மக்கள் மன்றங்களுக்கான பெயராட்சி உறுப்பினர் தேர்தல்களை நடுநிலையோடு நடத்துவதாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இவ்வாணையத்திற்கு இந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர், மாநில சட்டப் பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்தவும், மேற்பார்வையிடவும் பணித்துள்ளது. இது தொடர்பான சட்டம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ஆகும்.
விரைவான உண்மைகள் அரசியலமைப்பு அமைப்பு மேலோட்டம், அமைப்பு ...
அதிகாரப்பூர்வ சின்னம்[1] | |
அரசியலமைப்பு அமைப்பு மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 25 சனவரி 1950; 74 ஆண்டுகள் முன்னர் (1950-01-25) (தேசிய வாக்காளர் நாளாக கொண்டாடப்படுகிறது) |
ஆட்சி எல்லை | இந்தியா |
தலைமையகம் | நிர்வச்சன் சதன், அசோகா சாலை, புது தில்லி[2] |
பணியாட்கள் | ~300[3] |
அரசியலமைப்பு அமைப்பு தலைமைகள் | |
வலைத்தளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
மூடு