இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழு
From Wikipedia, the free encyclopedia
இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் 29 ஆகஸ்டு 1947 அன்று நிறைவேற்றிய தீர்மானத்தின் படி, 7 பேர் கொண்ட இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவை (Drafting Committee of Indian Constitution)நியமித்தது. பெனகல் நரசிங் ராவ் வரைவுக் குழுவிற்கு ஆலோசகராக இருந்தார். வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் மற்றும் 6 உறுப்பினர்கள் செயல்பட்டனர்.[2][3] இக்குழு வரைந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 22 பகுதிகளில் 395 பிரிவுகளும், 8 அட்டவணைகளும் கொண்டிருந்தது.
இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு:
- அம்பேத்கர் - தலைவர், அரசியலமைப்பு வரைவுக் குழு
- அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்
- என். கோபாலசாமி அய்யங்கார்
- கே. எம். முன்ஷி
- சையத் முகமது சாதுல்லா
- மாதவ ராவ் (பி. எல். மித்தர் உடல்நலக் குறைவால் விலகியதால், அப்பணியிடத்தில்)
- டி. டி. கிருஷ்ணமாச்சாரி (1948ல் டி. பி. கைத்தான் இறந்ததால், அப்பணியிடத்தில்)