இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்
From Wikipedia, the free encyclopedia
இந்தியாவில் முஸ்லிம் சமூகம் மிகப்பெரிய மத-சிறுபான்மையினராக இருந்தபோதிலும் இவர்கள் மீது அடிக்கடி வலதுசாரி இந்து தேசியவாதிகளால் வன்முறைகளும், தாக்குதல்களுக்கும் நிகழ்த்தப்படுகிறது. கடந்த காலங்களில், இந்த தாக்குதல்கள் வெறுப்பின் வெளிபாட்டின் வழியே அமைந்தன. மேலும் இந்த வன்முறைகள் இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான இனவாத மோதலாக வகைப்படுத்தப்பட்டன. இருப்பினும், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு பிறகு உருவாகிய இந்து-தேசியவாதத்தின் எழுச்சிக்கு பின்னர் இந்த தாக்குதல்கள் மிகவும் திட்டமிட்டதாகவும்,[1] அரசு அனுமதித்த படுகொலைகளின் வடிவத்தை எடுத்துக் கொண்டது.[2][3] 1954 ஆம் ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 6,933 மத மோதல்கள நடந்தன. 1950 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற மத மோதல்களில் சுமார் 10,000 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.[4]