![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/01/India_Vaccination_Map.jpg/640px-India_Vaccination_Map.jpg&w=640&q=50)
இந்தியாவில் கோவிட்-19 தடுப்பு மருந்து
From Wikipedia, the free encyclopedia
இந்தியாவில் கோவிட்-19 தடுப்பு மருந்து (Covid-19 vaccination in India) போடும் செயல் திட்டம் 2021 ஆம் ஆண்டு சனவரி மாதம் 16 ஆம் நாள் முதல் தொடங்கப்பட்டது. கோவிட்-19 நோய்க்குக் காரணமான சார்சு-கோவ்-2 என்ற தீநுண்மிக்கு எதிராக செயல்படும் மருந்தை பகுதி பகுதியாக இந்திய மக்களுக்கு செலுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
![thump](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/01/India_Vaccination_Map.jpg/640px-India_Vaccination_Map.jpg)
முதற்கட்டமாக நாடு முழுவதுமுள்ள சுகாதார மற்றும் முன்னணி தொழிலாளர்களுக்கு தட்டுப்பூசியை செலுத்துவதற்கு இத்திட்டம் முன்னுரிமை அளிக்கிறது. பின்னர் நாட்டில் 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு அல்லது சில குறிப்பிட்ட மருத்துவ நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்கு இத்திட்டம் வழிவகுக்கிறது.