இந்தியாவின் தன்னாட்சி நிர்வாகப் பகுதிகள்
From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் தன்னாட்சி நிர்வாகப் பகுதிகள் (Autonomous Administrative of India) இந்திய அரசியலமைப்பின் ஆறாம் அட்டவணை இந்திய மலைவாழ் பழங்குடி மக்களின் பண்பாடு, நாகரீகம், மொழி மற்றும் பொருளாதார அமைப்புகளைக் காத்திட வேண்டி, பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், மாநிலத்திற்குள், மாவட்டத் தன்னாட்சி நிர்வாகக் குழுக்களை அமைக்கும் அதிகாரம் இந்திய நாடாளுமன்றத்திற்கு வழங்கியுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட தன்னாட்சி மாவட்ட நிர்வாகப் பகுதிகள், வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களிலும் மற்றும் லடாக் ஒன்றியப் பிரதேசத்தில் இரண்டும் உள்ளது.