இண்டன் ஆறு
யமுனை ஆற்றின் துணையாறு / From Wikipedia, the free encyclopedia
இண்டன் ஆறு (Hindon River) (ஹிண்டன் ஆறு என்றும் அழைக்கப்படுகிறது) என்பது உத்தரப்பிரதேசத்தின் சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ஷகும்பரி தேவி மலைத்தொடரில் (மேல் சிவாலிக்) உருவாகி நொய்டாவில் உள்ள யமுனை நதியில் சேரும் ஒரு இந்திய நதியாகும். யமுனை நதியின் துணை நதியான இண்டன், முற்றிலும் மழைநீரை ஆதாரமாகக் கொண்டுள்ளது, இதன் நீர்ப்பிடிப்புப் பகுதி தோராயமாக 7,083 சதுர கிலோமீட்டர் (2,735 சதுர மைல்) ஆகும்.
இண்டன் ஆறு | |
---|---|
காசியாபாத்தில் இருந்து இண்டன் ஆற்றின் வான் பார்வை | |
அமைவு | |
நாடு | இந்தியா |
பகுதி | உத்தரப் பிரதேசம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | இரஜாஜி தொடர், சிவாலிக் மலை |
⁃ அமைவு | சகாரன்பூர் மாவட்டம், உத்தரப் பிரதேசம் |
⁃ ஆள்கூறுகள் | 35°05′N 77°08′E |
முகத்துவாரம் | யமுனை ஆறு |
⁃ அமைவு | செக்டார்-150, நொய்டா, இந்தியா |
⁃ ஆள்கூறுகள் | 28°24′50″N 77°29′46″E |
நீளம் | 400 km (250 mi) |
வடிநில அளவு | 7,083 km2 (2,735 sq mi) |
இது முசாபர்நகர் மாவட்டம், மீரட் மாவட்டம், பாக்பத் மாவட்டம், காசியாபாத் மாவட்டம் மற்றும் கௌதம் புத்த நகர் மாவட்டம் வழியாக 400 கிலோமீட்டர் (250 மைல்) ஓடி கங்கை மற்றும் யமுனை நதிகளுக்கு இடையில் பாய்கிறது, இது நொய்டா செக்டர்-150 இல் யமுனை ஆற்றில் கலக்கிறது. இந்திய விமானப்படை இண்டன் விமானப்படைத் தளமும் தில்லியின் புறநகரில் உள்ள காசியாபாத் மாவட்டத்தில் அதன் கரையில் அமைந்துள்ளது.[1]