இட்டாநகர்
அருணாச்சல பிரதேசத்தின் தலைநகரமும் ஓர் மாநகராட்சியும் ஆகும். / From Wikipedia, the free encyclopedia
இட்டாநகர் அருணாச்சல பிரதேசத்தின் தலைநகரமாகும். இது பபும் பரே மாவட்டத்தில் உள்ள இட்டாநகர் தலைநகர வலாயத்தில் அமைந்துள்ளது.[1] இது இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. நிஷி என்னும் பழங்குடிகளே இங்கு பெரும்பான்மையினராக வசிக்கும் பழங்குடிகள் ஆவர். தலைநகராக இருப்பதன் காரணமாக, இட்டாநகர் நாட்டின் பிற பகுதிகளுடன் தரை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் இட்டாநகர் இட்டா நகரம், நாடு ...
இட்டாநகர்
இட்டா நகரம் | |
---|---|
தலைநகரம் | |
'மேலிருந்து; இடமிருந்து வலம்: இட்டாநகர், கோம்பா பௌத்த மடாலயம், பௌத்த விகாரை, அருணாச்சல பிரதேச அரசு செயலகம், இட்டாநகர் கோட்டை, கங்கா ஏரி;இட்டாநகர்-ஹோல்லாங் நெடுஞ்சாலை | |
அடைபெயர்(கள்): அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரம் | |
ஆள்கூறுகள்: 27°06′00″N 93°37′12″E | |
நாடு | ![]() |
மாநிலம் | அருணாச்சலப் பிரதேசம் |
தலைநகர வலாயம் | இட்டாநகர் தலைநகர வலாயம் |
மாவட்டம் | பபும் பரே |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | இட்டாநகர் நகராட்சி |
ஏற்றம் | 320 m (1,050 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 59,490 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | AR-01, AR-02, ARX |
தட்ப வெப்பம் | ஈரப்பதமான மிதவெப்ப மண்டல காலநிலை |
மூடு
15ஆம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இட்டா கோட்டை, இந்நகருக்கு அருகில் உள்ளது. இக்கோட்டையின் பெயரை ஒட்டியே இந்நகர் இப்பெயரைப் பெற்றது. இது தவிர, பழமையான கங்கை ஏரியும், தலாய் லாமாவால் புனிதமானதாக அறிவிக்கப்பட்ட புத்தக் கோயில் ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. இயற்கை வளம் கொண்ட இந்நகரின் முக்கிய வாழ்வாதாரமாக வேளாண்மை அமைந்துள்ளது.[2]