1509 முதல் 1547 வரை இருந்த இங்கிலாந்து மன்னர் From Wikipedia, the free encyclopedia
இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி (Henry VIII ஜூன் 28, 1491 – ஜனவரி 28, 1547), 21 ஏப்ரல் 1509-இலிருந்து தனது இறப்பு வரை இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். அயர்லாந்தின் அரசராகவும் இருந்தவர், பின்னர் பிரான்ஸ் இராச்சியத்துக்கு உரிமையும் கோரினார். தனது தந்தை இங்கிலாந்தின் ஏழாம் ஹென்றியின் பின், டியுடர் குலத்தின் இரண்டாம் அரசர் இவர். ஆங்கிலேய மன்னராட்சி வரலாற்றில் எட்டாம் ஹென்றி மிகப் பெரிய புள்ளியாக விளங்கினார்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
எட்டாம் ஹென்றி Henry VIII | |
---|---|
இங்கிலாந்தின் அரசர் | |
ஆட்சிக்காலம் | 21 ஏப்ரல் 1509 – 28 சனவரி 1547 (37 ஆண்டுகள், 282 நாட்கள்) |
முடிசூட்டுதல் | 24 சூன் 1509 (அகவை 17) |
முன்னையவர் | ஹென்றி VII |
பின்னையவர் | எட்வர்ட் VI |
பிறப்பு | கிரீனிச் அரண்மனை, கிரீனிச் | 28 சூன் 1491
இறப்பு | 28 சனவரி 1547 55) வைட்ஹால் அரண்மனை, லண்டன் | (அகவை
வாழ்க்கைத் துணைகள் | அராகனின் கத்தரீன் ஆன் பொலெயின் ஜேன் சீமோர் கிளீவ்சின் ஆன் கத்தரீன் ஹவார்ட் கத்தரீன் பார் |
குழந்தைகளின் பெயர்கள் | மேரி I ஹென்றி ஃபிட்ஸ்ரோய் எலிசபெத் I எட்வர்ட் VI |
தந்தை | ஹென்றி VII |
தாய் | யோர்க்கின் எலிசபெத் |
மதம் | கிறித்தவம் (ஆங்கிலிக்கன், முன்னர் ரோமன் கத்தோலிக்கம்) |
கையொப்பம் |
ஆறு முறை மணந்ததற்காக மட்டுமன்றி அவர் இங்கிலாந்து திருச்சபையை காத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரித்து இங்கிலாந்து வரலாற்றில் அவர் முத்திரை பதித்துள்ளார். திருத்தந்தையின் தலைமையில் இங்கிலாந்தில் இயங்கிய திருச்சபையை ஹென்றி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தன்னைத் தானே அதன் தலைவராக அறிவித்தார். அதோடு, இங்கிலாந்தில் உள்ள அத்தனை காத்தோலிக்க துறவு மடங்களை அடியோடு ஓழித்தார். மேலும் அவர் ஆலய வழிபாட்டு முறைகளை மாற்றி அமைத்தார். இவை யாவும் செயவதர்கு முன்பு அவர் ஒரு தீவிர காத்தோலிகர் என்பது குறிக்கத்தக்கது;
எட்டாம் ஹென்றியைப் பற்றிய வரலாற்றுச் சான்றுகள் அவர் ரம்யமான, வசீகரமான, கம்பீரமான தோற்றம் கொண்டவராக வர்ணிக்கின்றன.சர்வாதிகாரியாக அவர் இங்கிலாந்தை ஆண்டர்; அப்படிப்பட்ட ஆட்சியை நடத்திய கடைசி மன்னராக இதுவரை இருக்கக் கூடும்.
தனது அகம்பாவத்திற்காக மட்டுமின்றி தனக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காகவும் அவர் ஆறுமுறை மணந்துகொண்டார். தனது நாட்டை ஆட்சி செய்ய ஒரு பெண்ணுக்கு போதிய வலிமை இல்லை என்று உறுதியாக் நம்பினார். இருப்பினும் இருதிவரை அவருக்கு ஆண்வாரிசு பிறக்கவில்லை. ஆறு திருமணங்கள் புரிந்ததோடு அவர் புரடஸ்தந்தம் இங்கிலாந்தின் தேசிய மதமாகுவதற்கு மறைமுகக் காரணமாகவும் இருந்ததால் அவர் இன்றும் ஆங்கில உலகத்தில் பேசப்பட்டு வருகிறார். அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் பார்ப்போருக்கு அறுவறுப்பை அள்ளி வீசும் அளவிற்கு பருமனாக வளர்ந்தார்; பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டார். ஆணவக்காரன்,பைத்தியக்காரன், காமவெறியன், ஈரமற்றவன், கொடுங்கோலன், தாழ்வு மனப்பான்மை கொண்டவன் என்று பலர் அவரைப்பற்றி தூற்றினர்.
ஆறு பெண்களை ஒன்றன் பின் ஒன்றாக மணந்துகொண்டது, அவர்களில் இரவரின் தலையை வெட்டி மரண தண்டனை கொடுத்தது, ஆகிய அவரது செயல்களை ஒட்டி பல புதின புத்தகங்கள், நாடகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவை படைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் மூலம் எட்டாம் ஹென்றி இன்றும் சாதாரண ஆங்கிலேய மக்களிடையே ஒரு பிரபல வரலாற்று நபராகப் பேசப்படுகிறார்.
க்ரீன்விச் அரண்மனையில் ஏழாம் ஹென்றிக்கும் யோர்க் கோமகள் எலிஸபெத்துக்கும் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். அவரோடு பிறந்த ஆறு குழந்தைகளில் மூன்று மட்டுமே குழ்ந்தை பருவத்தைத் தாண்டி வாழ்ந்தன. வாழ்ந்தவை: வேல்ஸ் யுவராஜன் ஆர்த்தர், மார்கரெட், மேரி ஆகியோர். மடிந்தவை: எலிஸபெத், எட்மன், கெத்தரின் ஆகியோர்.
1493 ஆம் ஆண்டில், இரண்டு வயதிலே டோவர் கோட்டையின் தலைவர் பதவியும் சிங்க் துறைமுகத்தின் பாதுகாவல நாயகராக( Lord Warden of the Cinque Ports) பதவியும் இவருக்கு வழங்கப்பட்டது.1494 ஆம் ஆண்டில் மூன்று வயதான இவன் இயோர்க் கோமானாக ( Duke of York) அமர்த்தப்பட்டான் .அதன் பின்பு இங்கிலாந்தின் காவலர்க்கோமானாகவும் அயர்லாந்தின் துணை முதல்வராகவும் இருந்தான். இவருக்கு பல ஆசிரியர்கள் ஆங்கிலம், பிரஞ்சு, இலத்தீன், ஸ்பேனிஷ் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொடுத்து இவரை அம்மொழிகளை நன்கு பேசவும் படிக்கவும் வைத்தனர்.அவரது அண்ணன் ஆர்த்தர் மன்னர் ஆவர் என்று அனைவரும் எதிர்பார்த்ததால் ஹென்றி இங்கிலாந்தின் உரோமன் காத்தோலிக்க திருச்சபை பீடத்தின் தலைமை பொறுப்பை வகிப்பார் என்று அவரது தந்தையார் திட்டமிட்டார்.பிற்காலத்தில் ஹென்றி நாட்டுக்கு மன்னராகி அதே திருச்சபையை பாப்பரசரின் கட்டுப்பாட்டிலிருந்து ( அதாவது திருப்பீடத்திலிருந்து(English: The Holy See )) வெளியேற்றி ஹென்றியின் தலைமைக்கீழ் ஒரு தனீ காத்தோலிக்க திருச்சபையை உருவாக்குவார் என்று யாருக்குத்தான் அன்று தெரிந்தது!
1502 ஆம் ஆண்டில் 15 வயதிலே இளவரசன் ஆர்த்தர் இயற்கை எய்தினான். அப்போது ஹென்றிக்கு பத்து வயது. ஆர்த்தரின் பட்டங்கள் அத்தனையும் ஹென்றிக்கு வழங்கப்பட்டது. ஹென்றியின் தந்தை, இங்கிலாந்திற்கும் ஸ்பேனுக்கும் உள்ள நட்பு நிலைக்கவேண்டும் என்று கருதி தன் மகன் ஹேன்றியை ஆர்த்தரின் மனைவியாய் இருந்த 'எரகோன்' கெத்தரினுக்கு மணமுடிக்க முடிவெடுத்தார் ( எரகோன் என்பது ஸ்பேனில் ஓரு மாவட்டம்). அந்தத் திருமணம் ஏழு வருடங்களுக்குப் பிறகு நடந்தது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.