ஆவிவேக மானி
From Wikipedia, the free encyclopedia
ஆவிவேக மானி (aeolipile or aeolipyle or eolipile) அல்லது ஈரோனின் இயந்திரம் என்றும் அழைக்கப்படுகிறது, இது தகடில்லாத அமைப்பாகும், நீருள்ள கொள்கலனை சூடேற்றும் போது, துழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நீராவி விசைப்பீறியிலிருந்து சுழல்சக்கரம் (Turbine) வழியாக வெளியேறும் நீராவி, சுழல திருப்பு விசையை (Torque) உண்டாக்கும்.[1] அல்லது ஏவூர்திப் பொறி.[2] முதலாம் நூற்றாண்டில் ரோமானிய எகிப்தைச் சேர்ந்த அலெசாண்டிராவின் ஈரோனால் இக்கருவி உருவாக்கப்பட்டது. பல வரலாற்றுப் பதிவுகள் இவருடைய கண்டுபிடிப்பை பாராட்டியுள்ளன.[3]
ஈரோனின் ஆவிவேக மானி இயந்திரமானது முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட நீராவிப் பொறியாகும்.[4] ஈரோனின் கண்டுபிடிப்புக்கு முன்பே முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த மார்க்கஸ் விட்ருவியஸ் பொல்லியோவினால் இக்கருவி பற்றிய விளக்கம் தரப்பட்டது. ஆனால் சுழலும் பாகங்களைப் பற்றிய விளக்கம் அவரால் தரப்படவில்லை.[5]