ஆரவல்லி மலைகளின் புவிமேலோட்டுப் பரிணாமம்
From Wikipedia, the free encyclopedia
ஆரவல்லி மலைத்தொடர் என்பது இந்தியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இது ராஜஸ்தான் மாநிலத்துக்குக் குறுக்கே வடகிழக்கிலிருந்து தென்மேற்காகச் சுமார் 300 மைல்கள் நீளமாக அமைந்துள்ள தற்போதைய புகழ்பெற்ற மலைப்பிறப்புப் பட்டியாகும் இது தொடர்ச்சியான கிரேட்டானிக் மோதல்களில் இருந்து உருவான இந்தியக் கேடயத்தின் ஒரு பகுதியாகும்.[1] ஆரவல்லி மலைகள் ஆரவல்லி மற்றும் டெல்லி மடிப்புப் பட்டைகளைக் கொண்டிருக்கின்றன, மேலும் அவை கூட்டாக ஆரவல்லி-டெல்லி மலைப்பிறப்புப் பட்டை என்று அழைக்கப்படுகின்றன. முழு ஆரவல்லி மலைத்தொடரும் சுமார் 700 கி.மீ.ஆகும் [2] அருகிலுள்ள மிகவும் இளைய இமயமலைப் பகுதியைப் போலல்லாமல், ஆரவல்லி மலைகள் மிகவும் பழமையானவை, புந்தேல்கண்ட் கிரேட்டானுக்கும் மார்வார் கிரேட்டானுக்கும் இடையிலான மோதல் மலைத்தொடரின் வளர்ச்சிக்கான முதன்மை வழிமுறையாக நம்பப்படுகிறது.
ஆரவல்லி மலைத்தொடருக்கு காரணமான துல்லியமான பரிணாம செயல்முறைகள் இன்றும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளன. இதன் புவி மேலோட்டு வரலாற்றுக்கு மாறுபட்ட கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.