ஆமைப் புறா
From Wikipedia, the free encyclopedia
ஆமைப் புறா ("turtle dove" அல்லது "mourning dove" (புலம்பும் புறா); Zenaida macroura) என்பது வடஅமெரிக்கக் கண்டத்தில் காணப்படும் புறா வகையாகும். இதற்குப் புலம்பும் புறா, கரோலினா புறா, மழை புறா எனப் பல பெயர்கள் உண்டு.[2] வட அமெரிக்காவில் அதிகம் காணப்படும் பறவை இதுவாகும். பொழுதுபோக்குக்காகவும் இறைச்சிக்காகவும் அதிகமாக வேட்டையாடப்படும் பறவையும் இதுவே. மித வெப்பமான பகுதிகளில் ஆண்டுக்கு ஆறு குஞ்சுகளை ஈனும் திறனுடையது இது. மணிக்கு 88 கி.மீ வேகத்தில் பறக்கும் திறனுடைய பறவை இதுவாகும்.[3]
ஆமைப் புறா | |
---|---|
Mourning dove vocalizations | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | புறா |
பேரினம்: | Zenaida |
இனம்: | Z. macroura |
இருசொற் பெயரீடு | |
Zenaida macroura (L, 1758) | |
வெயில் காலத்தில் மாத்திரம் வருடம் முழுவதும் குளிர் காலத்தில் மாத்திரம் | |
வேறு பெயர்கள் | |
|
இப்பறவை வெளிர் சாம்பலாகவும் பழுப்பாகவும் இருக்கும். ஆண் பெண் பறவைகள் பார்க்க ஒரே மாதிரி இருக்கும். இவை விதைகளை உண்ணும் பறவையாகும், குஞ்சுகளுக்குப் பெற்றோர்ப் புறாக்கள் பயிர்ப் பாலை உணவாகக் கொடுக்கின்றன.
இப்பறவைகள் ஊஉ ஊஉ என்று துக்கம் அனுசரிப்பது போல் சத்தமிடுவதால் புலம்பும் பறவைகள் என அழைக்கப்படுகின்றன. பழங்கால ரோமப் புலவர் வெர்சில் கூறிய சிறு செய்யுளை அடிப்படையாகக் கொண்டு இப்பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.