![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f7/Ricinus_March_2010-1.jpg/640px-Ricinus_March_2010-1.jpg&w=640&q=50)
ஆமணக்கு
தாவர இனம் / From Wikipedia, the free encyclopedia
ஆமணக்கு,(ஒலிப்புⓘ) (Ricinus communis) வெப்பவலயப் பகுதிகளில் 10-13 மீட்டர் வரை உயரமாக வளரக்கூடிய மரமாகும். எனினும் மித வெப்பப் பகுதிகளில் சுமார் 1-3 மீட்டர் வரையே வளரக்கூடிய ஓராண்டுத் தாவரமாக உள்ளது. இதன் விதைகளில் இருந்து விளக்கெண்ணெய் எடுக்கப்படுகிறது.விளக்கெண்ணெய் மருத்துவ குணங்கள் நிறைந்தது. குளிர்ச்சி தரக் கூடியது. நல்ல பேதி மருந்தாகப் பயன்படுகிறது.
ஆமணக்கு | |
---|---|
![]() | |
ஆமணக்கு மரம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
துணைத்தொகுதி: | அகலிஃபோய்டியே |
வகுப்பு: | மக்னோலியோப்சிடா |
வரிசை: | மல்பிகியாலெஸ் |
குடும்பம்: | இயுஃபோர்பியேசியே |
சிற்றினம்: | அகலிஃபியே |
பேரினம்: | ரிசினஸ் |
இனம்: | ரி. கொம்யூனிஸ் |
இருசொற் பெயரீடு | |
ரிசினஸ் கொம்யூனிஸ் லின். | |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bd/Seeds_of_Ricinus_communis.jpg/640px-Seeds_of_Ricinus_communis.jpg)
கோயில்களுக்குச் விளக்கேற்றப் பயன்படும் பலவிதமான எண்ணெய் வகைகளில் சிறப்பாகாக் குறிப்பிடப்படுவது ஆமணக்கு எண்ணெய்தான். கோயில்களின் தெய்வீகத் தன்மைகளுடன் ஒட்டி அமைந்துவிட்ட இந்த எண்ணெய், ஆமணக்கு விதைகளில் இருந்து எடுக்கப்படுகின்றது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கொட்டையூரிலுள்ள திருக்கோட்டீஸ்வரர் சிவன் கோயிலில் இம்மரத்தைக் காணலாம். இம்மரமே இக்கோயிலின் தலமரமாகும்[1]
விவசாய விளை நிலங்களின் ஓரங்கள், தோட்டந்துரப்புகள், தரிசு நிலங்கள், மணல் பிரதேசங்கள், வளம் குறைந்த பகுதிகளிலும் நன்றாக வளர்வதால் இன்று மிக அதிகளவில் பிரபலமடைந்து வருகின்றது.