ஆனந்த் மகிந்திரா
இந்திய பில்லியனர், தொழிலதிபர் / From Wikipedia, the free encyclopedia
ஆனந்த் கோபால் மகிந்திரா (Anand Mahindra) (பிறப்பு: மே 1, 1955) ஓர் இந்திய பில்லியனர் தொழிலதிபரும், மும்பையை தளமாகக் கொண்ட மகிந்திரா குழுமம் என்ற வணிக நிறுவனத்தின் தலைவருமாவார்.[4][5][6][7] இக்குழு விண்வெளி, வேளாண் வணிகம், வர்த்தகச் சந்தை, வாகனம், கட்டுமான உபகரணங்கள், பாதுகாப்பு, எரிசக்தி, பண்ணை உபகரணங்கள், நிதி மற்றும் காப்பீடு, தொழில்துறை உபகரணங்கள், தகவல் தொழில்நுட்பம், தளவாடங்கள், நில வணிகம் மற்றும் சில்லறை விற்பனை ஆகிய துறைகளில் செயல்பட்டு வருகிறது. இவர் மகிந்திரா அண்டு மகிந்திராவின் இணை நிறுவனர் செகதீசு சந்திர மகிந்திராவின் பேரன் ஆவார்
ஆனந்த் கோபால் மகிந்திரா | |
---|---|
பிறப்பு | 1 மே 1955 (1955-05-01) (அகவை 69) மும்பை, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஆர்வர்டு பல்கலைக்கழகம்[1][2] ஆர்வர்டு வர்த்த பள்ளி (எம்பிஏ)[2] |
பணி | தொழிலதிபர் |
சொத்து மதிப்பு | US$1.6 பில்லியன் (சனவரி 2020)[3] |
பட்டம் | தலைவர், மகிந்திரா குழுமம் |
வாழ்க்கைத் துணை | அனுராதா மகிந்திரா |
பிள்ளைகள் | 2 மகள்கள் |
வலைத்தளம் | |
www |
2020 ஆம் ஆண்டு சனவரி நிலவரப்படி, இவரது நிகர மதிப்பு 6 1.6 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர் ஆர்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆர்வர்டு வர்த்தகப் பள்ளியின் பழைய மாணவராவார்.[8] 1996 ஆம் ஆண்டில், இந்தியாவில் நலிந்த சிறுமிகளுக்கு கல்வியை ஆதரிக்கும் நன்கி காளி என்ற ஓர் அரசு சாரா அமைப்பை நிறுவினார்.[9]