ஆதம் (இசுலாம்)
இஸ்லாமிய இறைத்தூதர்களில் முதலாமவர் / From Wikipedia, the free encyclopedia
ஆதம் ஆபிரகாமிய சமயங்களின்படி கடவுளால் படைக்கப்பட்ட முதல் மனிதன் ஆவார். ஆதம் இஸ்லாம், பஹாய், ஆகிய மதங்களில் இறை தூதராகக் கருதப்படுகிறார். ஆதம் இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதர் என்று விவிலியமும், குரானும் கூறுகின்றன.
ஆதம் alayhi s-salām - ( عليه السلام ) | |
---|---|
The name Adam written in Islamic calligraphy followed by Peace be upon him. | |
தாய்மொழியில் பெயர் | ʾĀdam - آدم |
வாழ்க்கைத் துணை | ஹவ்வா(அலைஹிஸ்ஸலாம்)حواء |
பிள்ளைகள் |
|
ஆதம் நபியின் உருவாக்கமும், மலக்குகளின் ஆட்சேபனையும்:
இந்த உலகத்தைப் படைத்த இறைவன், அதில் வாழ்வதற்கு ஏற்ற சமுதாயமாக மனிதனைப் படைக்க எண்ணி தனது எண்ணத்தை மலக்குகளிடத்தில் சொல்லிக் காட்டினான். அந் நேரத்தில் அந்த மலக்குகள் இறைவனின் எண்ணத்தை ஆட்சேபித்து கருத்துத் தெரிவித்தார்கள்.இதனை திருமறைக் குர்ஆன் இவ்வாறு சொல்லிக் காட்டுகிறது.
பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன். என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது, அங்கே குழப்பம் விளைவித்து, இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னை புகழ்ந்து போற்றுகிறோமே, குறைகள் அற்றவன் என்று உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமே என்று கேட்டனர். நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று இறைவன் கூறினான். (அல் குர்ஆன் 2:30)