![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e3/Raja_Ravi_Varma_-_Sankaracharya.jpg/640px-Raja_Ravi_Varma_-_Sankaracharya.jpg&w=640&q=50)
ஆச்சாரியர்
From Wikipedia, the free encyclopedia
இந்து சமயம் மற்றும் சமூகத்தில் ஆச்சாரியர் (acharya) (IAST: ācārya), சமயச் சாத்திரங்கள், தத்துவங்கள், சடங்குகள் மற்றும் மரபுகள் தொடர்பான கருத்துகளுக்கு விளக்கம் அளிப்பவரும் மற்றும் ஆன்மீக வழிகாட்டியும் ஆவார். மேலும் இந்து சமயத்தின் ஒரு புதிய பிரிவின் நிறுவனரையும், தலைவரையும் ஆச்சாரியர் என்று அழைப்பர். வேத, வேதாந்த சாத்திரங்களை நன்கு கற்றவர்களை ஆச்சாரியர் எனும் அடைமொழியுடன் மரியாதையாகப் போற்றப்படுகிறர்கள்.[1] இந்து, சமணம் மற்றும் பௌத்த சமயச் சாத்திரங்களில், ஆச்சாரியர் எனும் அடைமொழி வேறுபட்ட பொருள்களில் குறிக்கப்படுகிறது. நேபாளம், இந்தியாவின் சில மாநிலங்களில் அந்தண சமூகத்வர்களில் சிலர் ஆச்சாரியா என குடும்பப் பெயர் இட்டுக் கொள்கின்றனர்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e3/Raja_Ravi_Varma_-_Sankaracharya.jpg/640px-Raja_Ravi_Varma_-_Sankaracharya.jpg)
ஆச்சாரியர் என்ற அடைமொழி ஏதேனும் ஒரு துறையில் மிகப்புகழ் பெற்று விளங்கிய அறிஞர்களுக்கு இடப்பட்டது. எடுத்துக்காட்டு: கணிதம் மற்றும் வானியல் துறையில் புகழ் பெற்ற அறிஞரான பாஸ்கராச்சாரி, அத்வைத நெறியை நிலைநாட்டிய ஆதிசங்கராச்சாரியர்.