ஆங்கிலோ-இடச்சு உடன்படிக்கை, 1824
From Wikipedia, the free encyclopedia
ஆங்கிலோ டச்சு உடன்படிக்கை, 1824 (ஆங்கிலம்: Anglo-Dutch Treaty of 1824) அல்லது இலண்டன் உடன்படிக்கை என்பது ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே 17 மார்ச் 1824-இல் இலண்டனில் கையெழுத்திடப்பட்ட ஓர் உடன்படிக்கையாகும். ஏற்கனவே 1814-ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட ஆங்கிலோ-டச்சு ஒப்பந்தத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு இந்த புதிய உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.
விரைவான உண்மைகள் ஒப்பந்த வகை, கையெழுத்திட்டது ...
ஒப்பந்த வகை | இருதரப்பு உடன்படிக்கை |
---|---|
கையெழுத்திட்டது | 17 மார்ச்சு 1824; 200 ஆண்டுகள் முன்னர் (1824-03-17) |
இடம் | இலண்டன் |
கையெழுத்திட்டோர் |
|
முழு உரை | |
![]() |
மூடு
இந்த உடன்படிக்கையில் நெதர்லாந்து சார்பில் என்ட்ரிக் பேகல் மற்றும் அன்டன் ரெய்ன்ஹார்ட் பால்க் கையெழுத்திட்டனர்; ஐக்கிய இராச்சியத்தின் சார்பில் ஜார்ஜ் கேனிங் மற்றும் சார்லஸ் வில்லியம்ஸ் கையெழுத்திட்டனர்.[1]