அஷ்டமங்களம்
From Wikipedia, the free encyclopedia
அஷ்டமங்களம் என்பது தார்மீக மதங்களில் குறிப்பிடப்படும் எட்டு மங்களகரமான சின்னங்களை குறிக்கும். திபெத்திய பௌத்தத்தின் படி, இவ்வஷ்டமங்கள் யிதங்களின் குணங்களை குறிக்கும். இவையனைத்து தெளிவுபெற்ற மனத்தின் குணங்களாக கருதப்படுகின்றன. பலவேறு பாரம்பரியங்கள் வெவ்வேறு சின்னங்கள் அஷ்டமங்களமாக கருதப்படுகின்றன.[1][2][3]
அஷ்டமங்களம் சின்னங்கள் பண்டைய இந்தியாவில் சுப காரியங்களின் போது பயன்படுத்தப்பட்டன. பௌத்தத்தில், இவை புத்தர் போதிநிலை அடைந்தவுடன் தேவர்கள் புத்தர்களுக்கு அளித்த எட்டு நிவேதனங்களை குறிக்கின்றன.