![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/ff/Biruni-russian.jpg/640px-Biruni-russian.jpg&w=640&q=50)
அல்-பிருனி
From Wikipedia, the free encyclopedia
அல்-பீரூனி (Al-Bīrūnī) என்ற அபூ இராய்ஹான் முகம்மத் இபின் அகமத் அல்-பிரூனீ (Al-Bīrūnī alias Abū Rayḥān Muḥammad ibn Aḥmad Al-Bīrūnī ) (பிறப்பு: 4/5 செப்டம்பர் 973 - இறப்பு: 13 டிசம்பர் 1048) [3] நவீன பாரசீக மொழியில் இவரை அபூ இராய்ஹான் பிரூனீ என்றழைப்பர்.[4]) [5] வரலாறு, வானவியல், சோதிடம், புவியியல் ஆகிய துறைகளில் அறிஞராக விளங்கியவர். தாரிக் அல்-இந்த் எனும் இந்திய வரலாற்று நூலை எழுதியதின் மூலம் இந்தியவியலுக்கு பெரும் பங்காற்றியவர்.
![]() சோவியத் ஒன்றியம், 1973இல் வெளியிட்ட அல்பிரூனியின் அஞ்சல் தலை | |
முழுப் பெயர் | அபூ இராய்ஹான் முகம்மத் இபின் அகமத் அல்-பிரூனீ |
---|---|
பிறப்பு | 4/5 செப்டம்பர் 973 காத் நகரம், தற்கால உஸ்பெகிஸ்தான் |
இறப்பு | 13 திசம்பர் 1048(1048-12-13) (அகவை 75) கஜினி நகரம், கஜினி மாகாணம், தற்கால ஆப்கானித்தான் |
Era | இசுலாமியப் பொற்காலம் |
சமயம் | நடு ஆசியா ஈரான்[1] கஜினி, கஜினிப் பேரரசு[2] |
பிரதான விருப்பு | புவியியல், இயற்பியல், மானிடவியல், சமூகவியல் , வானவியல், சோதிடம், வேதியியல், வரலாறு, நிலவியல், கணக்கியல், மருத்துவம், உளவியல், இசுலாமியத் தத்துவம், இசுலாமிய மெய்யியல் |
Notable ideas | இந்தியவியல், நிலவியல் வரைபடங்கள் |
Major works | கடந்த நூற்றாண்டுகளின் எச்சங்கள், நவரத்தினங்கள், இண்டிகா, சோதிடம் |
Influenced by
| |
தாக்கம்
|
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/66/Persian_Scholar_pavilion_in_Viena_UN_%28Avicenna%2CBiruni%29.jpg/640px-Persian_Scholar_pavilion_in_Viena_UN_%28Avicenna%2CBiruni%29.jpg)
மத்திய கால இசுலாமிய அறிஞரான அல்பீரூனி, இயற்பியல், கணக்கு, வானவியல், இயற்கை அறிவியல், மொழியியல், வரலாறு ஆகிய துறைகளில் பெரும் பங்காற்றியவர். அரபு, பாரசீகம், கிரேக்கம், யூதம், சிரியாக் மற்றும் சமசுகிருத மொழிகளில் பெரும் புலமை பெற்றவர். தற்கால மத்திய கிழக்கு ஆப்கானித்தானின் கஜினி மாகாணத்தில் அதிக காலம் வாழ்ந்தவர்.
1017இல் இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்கு, கிழக்கு, வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் பயணித்து இந்துக்களின் நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்களை கூர்ந்து நோக்கி, தாரிக்-அல்-ஹிந்த் (இந்தியாவின் வரலாறு) என்ற நூலை எழுதியதால், இவரை இந்தியவியல் நிறுவனர் என்று பாராட்டப்பட்டார். மேலும் பல இந்தியத் துணை கண்டத்தின் பல நாட்டு மக்கள் பின்பற்றும் சமயங்கள், சமயப் பழக்க வழக்கங்கள், சமூக ஏற்றத் தாழ்வுகளை கண்டறிந்து, 11ஆம் நூற்றாண்டின் இந்தியாவை விளக்கும் வகையில் அல்-உஸ்தாத் ("The Master") என்ற நூலை வெளியிட்டார். மேலும் 11ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் புவி அறிவியல் தொடர்பாக பல பங்களிப்புகளை செய்ததால், அல்-பரூனீயை நவீன புவியியல் வரைபடங்களின் தந்தை என என்று போற்றப்பட்டார்.