![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/77/Plaza_de_la_Marcha_Verde%252C_en_El_Aaiun.jpg/640px-Plaza_de_la_Marcha_Verde%252C_en_El_Aaiun.jpg&w=640&q=50)
அல்-உயூன்
From Wikipedia, the free encyclopedia
அல்-உயூன் அல்லது லஅயூன் (Laayoune, எசுப்பானியம்: El-Aaiún; அரபு மொழி: العيون al-ʿuyūn, தமிழாக்கம்: "ஊற்று") பிணக்கிலுள்ள ஆட்புலமான மேற்கு சகாராவிலுள்ள பெரிய நகரமாகும். தற்கால நகரத்தை 1938இல் எசுப்பானிய குடியேற்றவாதி அன்டோனியோ டெ ஓரோ நிறுவியதாகக் கருதப்படுகின்றது.[1] 1940இல் இதனை எசுப்பானிய சகாராவின் தலைநகராக அறிவித்தது. தற்போதைய மொராக்கோ அரசின் லாயூன்-பூய்தொர்-சாகியா அல் அம்ரா வலயத்தின் தலைநகராக விளங்குகின்றது.
அல்-உயூன்
العيون / லஅயூன் லஅயூன் | |
---|---|
![]() பசுமையணிச் சதுக்கம் | |
தன்னாட்சியற்ற ஆட்புலம் | மேற்கு சகாரா |
வலயம் | லஅயூன்-பூய்தொர்-சாகியா அல் அம்ரா |
மாநிலம் | லஅயூன் மாநிலம் |
குடியேற்றம் | 1934 |
நிறுவப்படல் | 1938 |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,96,331 |
நேர வலயம் | UTC |
வறண்ட ஆறான சகுய்யா அல் அம்ரா இந்நகரை இரண்டாகப் பிரிக்கின்றது. ஆற்றின் தென்கரையில் உள்ளது எசுப்பானியர்களால் கட்டமைக்கப்பட்ட பழைய நகராகும். இங்கு அவர்கள் காலத்து பேராலயமொன்று இன்றும் இயக்கத்தில் உள்ளது. இதன் பாதிரிமார்கள் இந்த நகரத்திற்கும் மேலும் தெற்கிலுள்ள தாக்ளாவிற்கும் சேவை புரிகின்றனர்.
1976 முதல் மேற்கு சகாராவை தனது நாட்டங்கமாக கோரிய மொரோக்கோ இந்த நகரை கைப்பற்றி ஆண்டு வருகின்றது.[2] அல்சீரியா ஆதரவளிக்கும் போலிசரியோ முன்னணி மேற்கு சகாராவின் விடுதலைக்குப் போராடி வருகின்றது. இந்த அணி லாயூனை ஆக்கிரமிக்கப்பட்ட தலைநகராகக் கருதுகின்றது.