![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e7/Domenico-Fetti_Archimedes_1620.jpg/640px-Domenico-Fetti_Archimedes_1620.jpg&w=640&q=50)
அர்க்கிமெடெசு
கிரேக்க கணிதவியலாளர் மற்றும் இயற்பியலாளர் (c.287-c.212 BC) / From Wikipedia, the free encyclopedia
சிரக்கூசாவின் ஆர்க்கிமிடீஸ் என்பவர் ஒரு கிரேக்க கணித, இயற்பியல், வானியல் வல்லுநர். மேலும் அவர் ஒரு பொறியியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளராவர்.[1] அவரது வாழ்க்கை பற்றிய சில விவரங்கள் மட்டுமே தெரிந்திருந்தாலும் அவர் பழங்கால முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவராக கருதப்படுகிறார். இயற்பியலில் அவரது கைதேர்ந்த இடங்கள் பாய்ம நிலையியல் (hydrostatics), நிலையியல் (statics) மற்றும் நெம்புகோல் கொள்கை விளக்கம் ஆகியவை ஆகும். அவர் முற்றுகை இயந்திரங்கள்(siege engines) மற்றும் அவருடைய பெயரை தாங்கியுள்ள திருகு விசையியக்க குழாய் உள்ளிட்ட புத்தாக்க இயந்திரங்களை வடிவமைத்த பெருமை பெற்றவர். நவீன சோதனைகள் ஆர்க்கிமிடீஸ் கண்ணாடிகளை வரிசையாக வைத்து கடலில் உள்ள கப்பல்களை எரித்தார் என்ற கூற்றின் சாத்தியத்தை நிரூபித்துள்ளன.
ஆர்க்கிமிடீஸ் (கிரேக்கம்: Ἀρχιμήδης) | |
---|---|
![]() ஆர்க்கிமிடீஸ் ஆழ்ந்த சிந்தனையில் - ஃபெட்டீ (1620) | |
பிறப்பு | கி.மு.287 சிரக்கூசா மாக்னா க்ரெசியா |
இறப்பு | கி.மு.212 (ஏறத்தாழ 75 வயது) சைரக்யூஸ் |
வாழிடம் | சிரக்கூசா, சிசிலி |
துறை | கணிதம் இயற்பியல் பொறியியல் வானவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தல் |
அறியப்படுவது | ஆர்கிமிடிஸ் கொள்கை ஆர்கிமிடிஸ் திருகு பாய்ம நிலையியல் (hydrostatics) நெம்புகோல் நுண்ணளவியல் (infinitesimals) |
ஆர்க்கிமிடீஸ் பழங்காலத்தின் மிகச்சிறந்த கணித மேதையாக கருதப்படுகிறார்.[2][3] அவரது சில குறிப்பிடத்தக்க செயல்கள் கீழ்வருமாறு: மெதட் ஆப் எக்ஜாஷன் என்னும் கணித வழியைப் பயன்படுத்தி ஒரு சாய் மாலை வட்டத்தின்(parabola) வில்லின்கீழுள்ள பரப்பளவை ஒரு முடிவிலா தொடரின் கூட்டுத்தொகையாக வெளிப்படுத்தி கண்டுபிடித்தார். மேலும் இதே மெதட் ஆப் எக்ஜாஷன் முறையைப் பயன்படுத்தி 'பை'யினிர்க்கு ஒரு குறிப்பிடத்தக்க அளவில் மிக துல்லிய தோராய மதிப்பு வழங்கினார். அவரது பெயர்கொண்ட சுருளை அவர் கண்டுபிடித்து விவரித்தார். பரப்புகளை சுழற்றுவதால் உண்டாகும் கொள்ளளவிற்கு ஒரு சூத்திரம் கொடுத்தார். மேலும் மிகப்பெரிய எண்களை எழுதுவதற்கு ஒரு வியத்தகு முறையை வடிவமைத்தார்.
ஆர்க்கிமிடீஸ் சைரக்யூஸ் முற்றுகையின் போது ,அவர் பாதிக்கப்படக்கூடாது என்ற உத்தரவு இருந்தபோதிலும், ஒரு ரோம படைவீரரால் கொல்லப்பட்டார். சிசெரோ ஒரு கோளத்தை உள்ளடக்கிய உருளை அமைப்பை கொண்ட ஆர்க்கிமிடீஸின் கல்லறையை பார்வையிடுதலை விவரிக்கிறார். ஆர்க்கிமிடீஸ் அத்தகைய கோளம், உருளையின் மூன்றில் இரண்டு பங்கு கொள்ளளவையும் பரப்பளவையும் ( அடிவட்டங்கள் உட்பட ) பெற்றிருக்கும் என்று நிரூபித்துள்ளார். அதையே தன் சிறந்த கணித வேலையாக அவர் கருதினார்.
அவரது கண்டுபிடிப்புகள் போலல்லாமல், ஆர்கிமிடிஸின் கணிதவேலைப்பாடுகள் பழங்காலத்தில் சிறிதே அறியப்பட்டிருந்தன. அலெக்சாண்ட்ரியாவின் கணிதவியலாளர்கள் அவரது கணித வேலைப்பாடுகளை படித்து மேற்கோளிட்டனர். அனால் கி.பி. 530இல் தான் மிளிடஸின் இசிடோர் என்பவர் அவரது கணித வேலைப்பாடுகளின் ஒரு விரிவான தொகுப்பை உருவாக்கினார். ஆறாம் நூற்றாண்டில் ஆர்க்கிமிடீஸின் வெலைப்பாடுகள் குறித்த யுடோசியஸின் கருத்துகள் நிறைய மக்களுக்கு அவரது படைப்புகளை அறிமுகப்படுத்தின. மறுமலர்ச்சி கால விஞ்ஞானிகளுக்கு அப்போதுவரை மீந்திருந்த ஆர்க்கிமிடீஸின் வேலைப்பாடுகள் மிகவும் பயனுள்ளதாகவும் எழுச்சிமிக்கனவாகவும் இருந்தன.1906இல் ஆர்க்கிமிடீஸின் அழிக்கப்பட்ட சுவடுகளிலிருந்து கண்டெடுக்கப்பட்ட வேலைப்பாடுகள் அவரது கணிதத்தின் ஒரு புது பரிமாணத்தை வெளிக்கொண்டுவந்தன.