![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6a/Abiy_Ahmed_2019.jpg/640px-Abiy_Ahmed_2019.jpg&w=640&q=50)
அபிய் அகமது
எத்தியோபியாவின் 15-வது தலைமை அமைச்சர, நோபல் அமைவி விருது பெற்றவர் / From Wikipedia, the free encyclopedia
அபிய் அகமது அலி (Abiy Ahmed Ali; பிறப்பு: 15 ஆகத்து 1976) எத்தியோப்பிய அரசியலாளர். இவர் எத்தியோபியாவின் 15-வது தலைமை அமைச்சராக 2018 ஏப்ரல் 2 முதல் பதவியில் உள்ளார்.[2][3] 20-ஆண்டுகால எரித்திரிய-எத்தியோப்பியப் பிணக்கை முடிவுக்குக் கொண்டு வந்தமைக்காக 2019 அக்டோபர் 11 இல் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பெற்றது.[4]
விரைவான உண்மைகள் அபிய் அகமது அலிAbiy Ahmed Ali, எத்தியோப்பியாவின் 15-வது பிரதமர் ...
அபிய் அகமது அலி Abiy Ahmed Ali | |
---|---|
![]() 2018 இல் அபிய் அகமது | |
எத்தியோப்பியாவின் 15-வது பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 ஏப்ரல் 2018 | |
குடியரசுத் தலைவர் | முலாத்து தெசோமே சாலி-வோர்க் சேவ்தி |
முன்னையவர் | ஐலிமரியாம் தேசாலென் |
எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர சனநாயக முன்னணியின் 3-வது தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 27 மார்ச்சு 2018 | |
Deputy | தெமென்னி மெக்கோனென் |
ஒரோமோ சனநாயகக் கட்சியின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 22 பெப்ரவரி 2018 | |
Deputy | இலெம்மா மெகர்சா |
முன்னையவர் | இலெம்மா மெகர்சா |
அறிவியல், தொழில்நுட்ப அமைச்சர் | |
பதவியில் 6 அக்டோபர் 2015 – 1 நவம்பர் 2016 | |
பிரதமர் | ஐலிமரியாம் தெசாலென் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 ஆகத்து 1976 (1976-08-15) (அகவை 47) பெசாசா, எத்தியோப்பியா |
அரசியல் கட்சி | ஒரோமோ சனநாயகக் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர சனநாயக முன்னணி |
துணைவர் | சினாசு த்யாச்செவ்[1] |
பிள்ளைகள் | 3 பெண்கள், வளர்ப்பு மகன் ஒருவர் |
கல்வி | மைக்ரோலிங்க் தகவல் தொழில்நுட்பக் கல்லூரி (BA) கிரீனிச்சுப் பல்கலைக்கழகம் (முதுகலை) ஆசுலாந்து பல்கலைக்கழகம் (MBA) அடிசு அபாபா பல்கலைக்கழகம் (PhD) |
விருதுகள் | அமைதிக்கான நோபல் பரிசு (2019) |
இணையத்தளம் | FDRE Office of the Prime Minister |
Military service | |
பற்றிணைப்பு | ![]() |
கிளை/சேவை | எத்தியோப்பிய இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1991–2010 |
தரம் | ![]() |
போர்கள்/யுத்தங்கள் | எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் ஐநா உருவாண்டா பணி எரித்திரிய-எத்தியோப்பியப் போர் |
மூடு
ஆளும் மக்கள் புரட்சிகர சனநாயக முன்னணி கட்சி,[5] ஒரோமோ சனநாயகக் கட்சி[6] ஆகியவற்றின் தலைவராக அபிய் அகமது இருந்து வருகிறார். முன்னாள் இராணுவப் புலனாய்வு அதிகாரியான அபிய் அகமது, எத்தியோப்பியத் தலைமையமைச்சர் ஆனது முதல், அரசியல், பொருளாதார சீர்திருத்தங்களுக்கான ஒரு பரந்த திட்டத்தை நாட்டில் அறிமுகப்படுத்தினார்.[7]
அக்டோபர் 2021 இல், அபி 5 அகமது இரண்டாவது முறையாக 5 ஆண்டு காலத்திற்கு அதிகாரப்பூர்வமாக பதவியேற்றார்.