![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f6/India_Tamil_Nadu_location_map.svg/langta-640px-India_Tamil_Nadu_location_map.svg.png&w=640&q=50)
அந்தியூர்
ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
அந்தியூர் (ஆங்கிலம்:Anthiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில், அந்தியூர் வட்டம் மற்றும் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமைடமும், பேரூராட்சியும் ஆகும். அந்தியூர் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
விரைவான உண்மைகள்
அந்தியூர் | |
— வட்டம் — | |
அமைவிடம் | 11°34′38″N 77°35′16″E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
வட்டம் | அந்தியூர் வட்டம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3] |
சட்டமன்றத் தொகுதி | அந்தியூர் |
சட்டமன்ற உறுப்பினர் |
ஏ. ஜி. வெங்கடாசலம் (திமுக) |
மக்கள் தொகை | 21,086 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இணையதளம் | www.townpanchayat.in/anthiyur |
மூடு
அந்தியூரின் மையப் பகுதியில் காமராசர் பேருந்து நிலையமும்“ வார சந்தையும், பத்ரகாளியம்மன் கோவிலும் அமைந்துள்ளது. அந்தியூர் வெற்றிலை மிகவும் பெயர் பெற்றதாகும். வேளாண்மையே இவ்வூரின் முதன்மையான தொழிலாகும். இவ்வூர் குருநாதசுவாமி பண்டிகைக்கு பிரபலமானது.