அந்தர்மாணிக்கு நதி
வங்காளதேசத்தில் உள்ள ஒரு நதி / From Wikipedia, the free encyclopedia
அந்தர்மாணிக்கு நதி (Andharmanik River) வங்காளதேசத்தில் அமைந்துள்ளது. கங்கை-பத்மா ஆற்றுத் தொகுதியில் அமைந்துள்ள கடற்கரையோர பெரிய ஆறுகளில் இதுவும் ஒன்றாகும் வங்கதேசத்தின் பதுவாகாலி மாவட்டத்தில் உள்ள கலபாரா துணைமாவட்டத்தின் முக்கிய ஆறுகளில் ஒன்றுமாகும். சமீப ஆண்டுகளாக அந்தர்மாணிக்கு நதி படிப்படியாக வறண்டு வருவதால் கலாபாரா துணை மாவட்டத்தின் மக்கள் தங்கள் கவலைகளை எழுப்பியுள்ளனர். சுமார் 40 கிலோமீட்டர்கள் (25 mi), ஆக இருந்த மொத்த நதியின் நீளம் குறைந்தது 25 கிலோமீட்டர்கள் (16 mi) ஆக குறைந்துள்ளதே இவர்களின் கவலைக்கு காரணமாகும். புதிய வண்டல் மண் படிவு காரணமாக இந்நதி நிரந்தரமாக வறண்டு விட்டது. 1960 ஆம் ஆண்டுகளில் உள்ளூர் அரசாங்கம் அந்தர்மாணிக்கு மற்றும் பிற அருகிலுள்ள ஆறுகளின் மீது பல அணைகளைக் கட்டியது. முக்கியமாக இந்தக் காலத்திலிருந்துதான் அந்தர்மாணிக்கு நதி வறண்டு போகத் தொடங்கியது. இந்த அணைகளில் மிகவும் செல்வாக்கு மிக்க அணைகளில் ஒன்று அந்தர்மாணிக்கு நதியின் ஊற்றுமூலமான கொச்சுபத்ரா ஆற்றின் மீது உள்ளது. கால்வாய்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருப்பது, ஆற்றின் பகுதியில் கட்டுப்பாடற்ற விவசாயம் போன்றவையும் வண்டல் படிவதற்கான மற்ற காரணங்களாகும். 2013 ஆம் ஆண்டின் இறுதியில், அந்தர்மாணிக்கு ஆற்றின் கரையில் புதிய கடல் துறைமுகம் அமைக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. அப்போதிருந்து, இந்த நதி முக்கியத்துவம் பெறுகிறது மற்றும் நிபுணர்கள் தெற்கு வங்காளதேசத்தின் எதிர்கால பொருளாதார மையமாக இந்நதியை கணித்துள்ளனர். [1] [2] [3] [4] [5]
அந்தர்மாணிக்கு நதி Andharmanik River | |
---|---|
அமைவு | |
நாடு | வங்காளதேசம் |
மண்டலம் | கலாபாரா துணை மாவட்டம் |
மாவட்டம் | பதுவாகாளி மாவட்டம் |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | |
⁃ ஆள்கூறுகள் | 21.941°N 90.140°E / 21.941; 90.140 |