அந்தமான் நிக்கோபார் தீவுகள்
இந்திய யூனியன் பிரதேசம் / From Wikipedia, the free encyclopedia
அந்தமான் நிக்கோபார் தீவுகள் (Andaman and Nicobar Islands) இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். இத்தீவுகள் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளன. இது இரண்டு தீவுக் கூட்டங்களைக் கொண்டது. அவை அந்தமான் தீவுகள் மற்றும் நிகோபார் தீவுகள் ஆகும். இவை அந்தமான் கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கின்றன. இப்பிரதேசத்தின் தலைநகரம் போர்ட் பிளேர் என்னும் அந்தமானில் உள்ள நகரம் ஆகும்.
அந்தமான் நிக்கோபார் தீவுகள் | |
---|---|
சின்னம் | |
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இருப்பிடம் | |
நாடு | இந்தியா |
நிறுவப்பட்டது | 1956-11-01 |
தலைநகர் | போர்ட் பிளேர் |
பெரிய நகரம் | போர்ட் பிளேர் |
மாவட்டங்கள் | 3 |
அரசு | |
• உயர்நீதிமன்றம் | கல்கத்தா உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 8,249 km2 (3,185 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 3,80,581 |
• அடர்த்தி | 46/km2 (120/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-AN |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் | 0.778 (உயர்வு) |
அலுவலக மொழிகள் | இந்தி, ஆங்கிலம் தமிழ் மொழி [2] |
பிற பேசும் மொழிகள் | வங்காள மொழி, தமிழ் மொழி |
இணையதளம் | https://www.andaman.gov.in/ |
8,249 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அந்தமான் நிகோபார் தீவுகளின் மொத்தம் எண்ணிக்கை 572 ஆகும். இதில் மக்கள் குடியிருக்கும் தீவுகளின் எண்ணிக்கை 36 ஆகும். இத் தீவுக்கூட்டங்களைக் கொண்ட இந்தத் தொகுதி ஒரு முனையில் இருந்து மறு முனைவரை 800 கி.மீட்டருக்கும் அதிகமான தொலைவு கொண்டது. அந்தமான் நிகோபாரின் தலைநகரான போர்ட் பிளேயரில் இருந்து கப்பல் மூலம் பொருட்களை தென் முனைத்தீவுகளுக்குக் கொண்டு சேர்க்க 50 மணி நேரம் வரை பிடிக்கும். இங்குள்ள தீவுகள் அரிய வகை கடல் உயிரினங்கள், தென்னை மரம் சூழ்ந்த கடற்கரைகள், பவளப் பாறைகள், பசுமைக் காடுகள், அருவிகள் போன்றவற்றைக் கொண்டுள்ளன.