அண்டால்சிடாசின் அமைதி உடன்பாடு
அமைதி உடன்பாடு / From Wikipedia, the free encyclopedia
மன்னரின் அமைதி உடன்பாடு (கிமு 387) என்பது பாரசீக மன்னர் இரண்டாம் அர்தசெராக்சால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அமைதி உடன்பாடாகும். இது பண்டைய கிரேக்கத்தில் கொரிந்தியப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. அகாமனிசிய பாரசீகத்தின் அரசனுடன் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த சூசாவுக்குப் பயணித்த எசுபார்த்தன் தூதர் அண்டால்சிடாசின் பெயரால், இந்த ஒப்பந்தம் அண்டால்சிடாசின் அமைதி உடன்பாடு (Peace of Antalcidas) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் பழங்காலத்தில் மிகவும் பொதுவாக மன்னரின் அமைதி உடன்பாடு என்று அழைக்கப்பட்டது, இது பாரசீக செல்வாக்கின் ஆழத்தைக் காட்டுகிறது, ஏனெனில் பாரசீகர்கள் கொடுத்த தங்கமே முந்தைய போருக்கு உந்து விசையாக இருந்தது. முதல் பெலோபொன்னேசியப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த முப்பது ஆண்டு அமைதி ஒப்பந்தத்தைப் போன்றே இந்த ஒப்பந்தமும் ஒரு பொது அமைதி ஒப்பந்தத்தின் ஒரு வடிவமாகும்.