அங்கதம்
From Wikipedia, the free encyclopedia
தொல்காப்பியம் அங்கதம் பற்றிக் குறிப்பிடுகிறது
தற்காலத்தில் அங்கதம் என்பது எதிர் முரணாக நகைச்சுவையாக ஒரு விடயத்தை எழுதுவதைக் குறிக்கும். வெளிப்படையாக சொல்லப்படுவதற்கும் உட்பொருளுக்கும் இருக்கும் வித்தியாசம் நகைச்சுவையாக அமையும். இதில் வாசகரின் புரிதல் நகைச்சுவையை உணர தேவை.
"அங்கதம் இலக்கியத்தின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. அதிகார அமைப்பை, புனிதங்கள் என்று கருதப்படுவனவற்றை, எல்லாராலும் ஏற்கப்பட்டுவிட்ட ஒன்றைத்தான் எப்போதும் அங்கத இலக்கியம் தன் குறியாகக் கொள்கிறது. அதை தன் நகைச்சுவை மூலம் தலைகீழாக்கிப் பார்க்கிறது."[1]
சில அங்கதம் படைப்புகள் கவிழ்ப்பாக்கம் (subversive writing) அல்லது வசைப்படைப்புகள் என்ற விமர்சனத்தை எதிர்நோக்கியுள்ளன.