அகத்தியர் அருவி
From Wikipedia, the free encyclopedia
அகத்தியர் அருவி (Agasthiyar Falls) என்பது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள அருவி ஆகும். இந்த அருவிக்குக் காரையார் மற்றும் சேர்வலாறு நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வந்து கொண்டிருக்கிறது. சுமார் 25 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த அருவியில் ஆண்டு முழுமைக்கும் தண்ணீர் வருவதால், இந்த அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
விரைவான உண்மைகள் அகத்தியர் அருவி, அமைவிடம் ...
அகத்தியர் அருவி | |
---|---|
பாபநாசம் அருவி | |
அகத்தியர் அருவியின் தொடர் தோற்றம் | |
அமைவிடம் | பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு |
மொத்த உயரம் | 300 அடி (91 m) |
நீர்வழி | தாமிரபரணி ஆறு |
மூடு