நெடுவரை (புவியியல்)
From Wikipedia, the free encyclopedia
(புவியியல்) நெடுவரை அல்லது நெடுங்கோடு அல்லது நிலநிரைக்கோடு (meridian or line of longitude) புவியின் பரப்பில் கற்பனையான பெருவட்டத்தில் பாதியாகும். இவற்றின் ஒருமுனை வட துருவத்திலும் மற்றொரு முனை தென் துருவத்திலும் முடிகின்றன; ஒரே அளவிலான நெட்டாங்குகள் அனைத்தையும் இணைக்கின்ற கோடாகும். இந்த வட்டத்தில் உள்ள ஓர் புள்ளியின் அமைவிடத்தை அதன் நிலநேர்க்கோடு மூலம் பெறலாம். ஒவ்வொரு நிரைகோடும் அனைத்து நிலநேர்க்கோட்டு வட்டங்களுக்கும் செங்குத்தானவை. நிரைகோடுகள் அனைத்துமே ஒரே அளவிலானவை. இவை புவியின் பெருவட்டத்தில் பாதியானவை. எனவே இவற்றின் நீளம் 20,003.93 கிமீ (12,429.9 மைல்கள்) ஆகும்.