தில்லி மாநகராட்சி தேர்தல், தில்லி மாநகராட்சியின் 250 வார்டு உறுப்பினர்களை நேரடித் தேர்தல் மூலம் வாக்காளர்கள் தேர்வு செய்ய 4 டிசம்பர் 2022 அன்று தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை 7 டிசம்பர் 2022 நடைபெற்றது. தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. 1.46 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 18 மே 2022 அன்று தில்லியின் 3 மாநகராட்சிகளை ஒன்றிணைத்து தில்லி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு நடக்கும் இத்தேர்தலே தில்லி மாநகராட்சிக்கு நடைபெறும் முதல் தேர்தல் ஆகும். இத்தேர்தலில் முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சி 134 வார்டுகளில் வென்று, தில்லி மாநகராட்சியைக் கைப்பற்றியது.
விரைவான உண்மைகள் கட்சி, விழுக்காடு ...
2022 தில்லி மாநகராட்சி தேர்தல்
|
|
|
|
|
|
மூடு