2017 மகளிர் அணிவகுப்பு
From Wikipedia, the free encyclopedia
மகளிர் அணிவகுப்பு (2017 Women's March )[1] [2] [3] அமெரிக்கக் குடியரசுத் தலைவராக டோனால்ட் டிரம்ப் பதவியேற்ற மறுநாள் சனவரி 21, 2017 அன்று நடந்த போராட்டத்தினைக் குறிப்பதாகும். டிரம்பின் பல அறிக்கைகள் பெண்களுக்கு எதிராகவோ அல்லது பெண்களை அடக்குவதனைப் போன்று உள்ளது எனக் கருதப்பட்டதால் இந்த அணிவகுப்பு நடைபெற்றது. [1] இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய ஒற்றை நாள் போராட்டமாகப் பார்க்கப்படுகிறது .[4] பெண்களின் உரிமைகள், குடிவரவு சீர்திருத்தம், சுகாதாரச் சீர்திருத்தம், இனப்பெருக்க உரிமைகள், சுற்றுச்சூழல், நங்கை, நம்பி, ஈரர், திருனர் உரிமைகள், இன சமத்துவம், மத சுதந்திரம், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய காரணத்திற்காக இது நடைபெற்றது.[5] எனினும் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய உாிமைகள் மறுக்கப்பட்ட போது அவா்கள் துணிவுடன் களத்தில் இறங்கிப் போராடினா். போராடும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானதால் போராட்டம் பொிதானது. இந்தப் போராட்டதின் அமைப்பாளர்களின் கூற்றுப்படி, "புதியதாகப் பதவியேற்ற அரசிற்கு முதல் நாளில் தைரியமான செய்தியை அனுப்புவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது என்றனா், மேலும் பெண்களின் உரிமைகளும் மனித உரிமைகள் தான் என்று உலகிற்கு எடுத்துக்காட்ட விரும்பினோம் என்று கூறினார்". [6]
இக் கட்டுரை இலக்கணப் பிழை, எழுத்துப்பிழை, இணைப்பு, தொனி, வடிவமைப்பு ஆகிய சிக்கல்களைக் கொண்டுள்ளது. |
இதன் முக்கிய ஆர்ப்பாட்டம் வாசிங்டன், டிசியில் நடைபெற்றது, இது பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய உாிமைக்கான போராட்டம் என்று அறியப்பட்டது. இப்போராட்டம் நியாயமானதாக இருந்ததால்,ஆதரவு பெருகியது. உலகெங்கிலும் பல ஊர்வலங்கள் இது தொடர்பாக நடைபெற்றன. வாசிங்டனில் நடைபெற்ற அணிவகுப்பு யூடியூப், முகநூல் மற்றும் டுவிட்டரில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. [7] இதில் 470,000 க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். அமெரிக்காவில் நடந்த அணிவகுப்புகளில் 3,267,134 மற்றும் 5,246,670 பேர் பங்கேற்றனர், [8] இது அமெரிக்க மக்கள்தொகையில் சுமார் 1.0 முதல் 1.6 சதவீதம் பேர் ஆகும். உலகளாவியப் பங்கேற்பு ஏழு மில்லியனுக்கும் அதிகமாக இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. [9] அமெரிக்காவில் குறைந்தது 408 அணிவகுப்புகளும், [9] மற்ற நாடுகளில் 168 அணிவகுப்புகள் நடத்தப்படும் எனத் திட்டமிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. [10] அணிவகுப்புகளுக்குப் பிறகு, உலகெங்கிலும், ஏழு கண்டங்களிலும், கனடாவில் 29, மெக்சிகோவில் 20, மற்றும் அண்டார்டிகாவில் 1,என மொத்தம் சுமார் 673 அணிவகுப்புகள் நடந்ததாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர். [11] மக்கள் அமைதியாகத் தங்களது போராட்டங்களை நடத்தினர். டிசி, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் நகரம் அல்லது சியாட்டிலில் அணிவகுப்பில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் யாரும் கைது செய்யப்படவில்லை, அங்கு மொத்தம் இரண்டு மில்லியன் மக்கள் கலந்துகொண்டனர். "குடிசார் உரிமைகள் இயக்கம் வன்முறையற்ற சித்தாந்தத்தை கடைப்பிடிக்க விரும்புவதாக" இந்த அம்மைப்பின் இணையதளம் கூறுகிறது. [12]