ஹௌரா பாலம்
From Wikipedia, the free encyclopedia
ஹௌரா பாலம் என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள ஹூக்ளி ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள ஒரு சீரான தொங்கு பாலம் ஆகும். 1943-இல் தொடங்கிவைக்கப்பட்ட[5][11] இந்தப் பாலத்திற்கு முதலில் புதிய ஹவுரா பாலம் என்றே பெயரிடப்பட்டது. ஏனெனில் இது ஹவுரா மற்றும் கொல்கத்தா (கல்கத்தா) நகரங்களை இணைக்கும் அதே இடத்தில் இருந்த ஒரு மிதவைப் பாலத்துக்கு மாற்றாக அமைக்கப்பட்டது. 1965-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி, முதல் இந்திய மற்றும் முதல் ஆசிய நோபல் பரிசு பெற்ற சிறந்த வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் நினைவாக இது ரவீந்திர சேது என மறுபெயரிடப்பட்டது.[11] இது இன்றும் ஹவுரா பாலம் என்று அழைக்கப்படுகிறது.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
ஹௌரா பாலம் | |
---|---|
இரவில் ஹௌரா பாலம் | |
அதிகாரப் பூர்வ பெயர் | ஹௌரா பாலம் |
போக்குவரத்து | ஸ்டேண்ட் சாலையின்[1] 4 பாதைகள்[2] பாதசாரிகள், மிதிவண்டிகள் போன்றவைக்கு பாதைகள் உண்டு |
தாண்டுவது | ஊக்ளி ஆறு[3] |
இடம் | ஹவுரா மற்றும் கொல்கத்தா[3] |
பராமரிப்பு | கொல்கத்தா துறைமுக பொறுப்புக்கழகம்[4] |
வடிவமைப்பாளர் | ரெண்டல், பால்மர் மற்றும் ட்ரிட்டன்[5] |
வடிவமைப்பு | தொங்கு பாலம் Balanced Cantilever[6] மற்றும் truss arch[7] |
கட்டுமானப் பொருள் | எஃகு |
மொத்த நீளம் | 705 m (2,313.0 அடி)[8][9] |
அகலம் | 71 அடி (21.6 m) with two footpaths of 15 அடி (4.6 m) on either side[6] |
உயரம் | 82 m (269.0 அடி)[7] |
அதிகூடிய அகல்வு | 1,500 அடி (457.2 m)[6][7] |
Vertical clearance | 5.8 m (19.0 அடி)[6] |
Clearance below | 8.8 m (28.9 அடி)[6] |
வருடாந்திர சராசரி தினசரி போக்குவரத்து | 100,000 வாகனங்கள் மற்றும் 150,000 பாதசாரிகள்[10] |
கட்டியவர் | Braithwaite, Burn & Jessop Construction Company |
கட்டுமானம் தொடங்கிய தேதி | 1936 (1936)[5] |
கட்டுமானம் முடிந்த தேதி | 1942 (1942)[5] |
திறப்பு நாள் | 3 February 1943; 81 ஆண்டுகள் முன்னர் (3 February 1943)[9] |
சுங்கத் தீர்வை | இரு வழிகளிலும் கட்டணமற்றது |
அமைவு | 22.5851°N 88.3469°E / 22.5851; 88.3469 |
கொல்கத்தா மற்றும் மேற்கு வங்காளத்தின் புகழ்பெற்ற சின்னமாக ஹூக்ளி ஆற்றில் உள்ள பாலங்களில் இதுவும் ஒன்றாகும். மற்றவை இரண்டாவது ஹூக்ளி பாலம் என்று அழைக்கப்படும் வித்யாசாகர் பாலம், விவேகானந்தர் பாலம் நிவேதிதா பாலம் ஆகியவையாகும். ஹவுரா பாலம் தோராயமாக 1,00,000 வாகனங்கள்[12] மற்றும் 1,50,000-இற்கும் மேற்பட்ட நடைப்பயணிகளின் தினசரி போக்குவரத்தைக் கொண்டுள்ளது.[10] இது உலகின் மிகவும் பரபரப்பான தொங்கு பாலமாகும்.[13] இது உலகின் மிகவும் பரபரப்பான தொங்கு பாலமாகும். அதன் கட்டுமானத்தின் போது மூன்றாவது நீளமான தொங்குபாலமாக இருந்த ஹவுரா பாலம்[14] தற்போது உலகின் ஆறாவது நீளமான பாலமாக உள்ளது.[15][16]