வில்லியம் கோட்டை, இந்தியா
இந்தியாவின் கல்கத்தாவில் உள்ள ஒரு கோட்டை / From Wikipedia, the free encyclopedia
வில்லியம் கோட்டை (Fort William) கங்கை ஆற்றின் முதன்மை கிளையாறான ஊக்லி ஆற்றின் கிழக்குக் கரையில், கல்கத்தாவில் (தற்போதைய கொல்கத்தா) கட்டப்பட்டுள்ள ஓர் கோட்டை ஆகும். இது பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தில் துவக்க காலங்களில் கட்டப்பட்டது.
விரைவான உண்மைகள் வில்லியம் கோட்டை Fort William ফোর্ট উইলিয়াম, வகை ...
வில்லியம் கோட்டை Fort William ফোর্ট উইলিয়াম | |
---|---|
கொல்கத்தா, இந்தியா | |
உள்ளிருந்து வில்லியம் கோட்டையின் காட்சி, c. 1828 | |
வகை | கோட்டை , தரைப்படைத் தலைமையக காவற் கோட்டமும் ஆயுதக்கிடங்கும். |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், சிராச் உத் தவ்லா, இந்தியத் தரைப்படை |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 1781 |
பயன்பாட்டுக் காலம் |
1781 - இன்றுவரை |
சண்டைகள்/போர்கள் | பிளாசி சண்டை |
காவற்படைத் தகவல் | |
காவற்படை | கிழக்கு ஆணைப்பரப்பு |
மூடு
இக்கோட்டைக்கு இங்கிலாந்து, அயர்லாந்தின் மூன்றாம் மற்றும் இசுக்காட்லாந்தின் இரண்டாம் வில்லியத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.[1] கோட்டைக்கு முன்னால் உள்ள திடல் இக்கோட்டையின் அங்கமாக இருந்தது; இது கொல்கத்தாவில் உள்ள மிகப்பெரிய நகரியப் பூங்காவாக விளங்குகிறது.