வலைவாசல்:தமிழீழம்/சிறப்புக் கட்டுரை/7
From Wikipedia, the free encyclopedia
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல்லாயிரம் ஆண்டுகளாக பெரும்பான்மையினராக வாழ்ந்து வரும் தமிழர், இலங்கைத் தமிழர் அல்லது இலங்கை வம்சாவழித் தமிழர் எனப்படுவர். பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கோப்பி, தேயிலை தோட்டங்களில் பணி புரிதற்பொருட்டு தமிழ் நாட்டிலிருந்து கொணர்ந்து குடியமர்த்தப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழரிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும்பொருட்டே வம்சாவழித் தமிழர் எனும் தொடர் பயன்படுத்தப்பட்டது. இலங்கைத் தமிழர்கள், பண்பாடு மற்றும் மொழி அடிப்படையிலாக ஒரே ரீதியாகவிருந்த போதும், சிறு சிறு வேறுபாடுகளின் அடிப்படையில் அவர்களை யாழ்ப்பாணத் தமிழர், வன்னித் தமிழர், மன்னார் தமிழர், திருகோணமலை தமிழர், மட்டக்களப்புத் தமிழர், வடமேற்குத் தமிழர், கொழும்புத் தமிழர், வடமத்தியத் தமிழர் என பிரிக்கலாம்.