வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 3வது பெரிய நகரம். பிரித்தானிய - பிரஞ்சு போர் நடைப்பெற்ற இடம். / From Wikipedia, the free encyclopedia
வந்தவாசி (ஆங்கிலம்: WANDIWASH), (அ) வந்தை இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி வட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி) ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் 22 நகராட்சி உறுப்பினர்களுடன் கூடிய இரண்டாம் நிலை நகராட்சியும் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் வந்தவாசி VANDAVASIவந்தை, நாடு ...
வந்தவாசி
VANDAVASI வந்தை | |
---|---|
இரண்டாம் நிலை நகராட்சி | |
ஆள்கூறுகள்: 12.5°N 79.62°E / 12.5; 79.62 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மண்டலம் | தொண்டை மண்டலம் |
வருவாய் கோட்டம் | செய்யார் |
சட்டமன்றத் தொகுதி | வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி | ஆரணி மக்களவைத் தொகுதி |
தோற்றுவித்தவர் | தமிழ்நாடு அரசு |
அரசு | |
• வகை | இரண்டாம் நிலை நகராட்சி |
• நிர்வாகம் | வந்தவாசி நகராட்சி |
• வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் | ஆரணி |
• மக்களவை உறுப்பினர் | திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத் |
• சட்டமன்ற உறுப்பினர் | திரு.அம்பேத்குமார் |
• மாவட்ட ஆட்சியர் | திரு.முருகேஷ், இ. ஆ. ப. |
• நகராட்சி தலைவர் | திரு. |
பரப்பளவு | |
• இரண்டாம் நிலை நகராட்சி | 72 km2 (28 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | மீட்டர்கள் |
மக்கள்தொகை (2011) | |
• இரண்டாம் நிலை நகராட்சி | 31,320 |
• பெருநகர் | 74,320 |
இனம் | வந்தவாசிகாரன் |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீடு | 604408 |
வாகனப் பதிவு | TN 97 |
சென்னையிலிருந்து தொலைவு | 117 கி.மீ (73மைல்) |
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 78 கி.மீ (48மைல்) |
திண்டிவனத்திலிருந்து தொலைவு | 38 கி.மீ (24மைல்) |
ஆரணியிலிருந்து தொலைவு | 44 கிமீ (27மைல்) |
காஞ்சிபுரத்திலிருந்து தொலைவு | 41 கிமீ (25மைல்) |
மேல்மருவத்தூரிலிருந்து தொலைவு | 36 கிமீ (22மைல்) |
வேலூரிலிருந்து தொலைவு | 81 கிமீ (50மைல்) |
இணையதளம் | வந்தவாசி நகராட்சி |
மூடு
திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்றாவது பெரிய நகரமாகும். இங்குத் தரமான கோரைப்பாய்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நகரம் வேலூர் - ஆரணி - வந்தவாசி சாலை, ஆற்காடு - திண்டிவனம் மாநில நெடுஞ்சாலை மற்றும் போளூர் - செய்யூர் சாலை ஆகிய மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.