ரோமனெசுக் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை
From Wikipedia, the free encyclopedia
ரோமனெசுக் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை என்பது, 11 ஆம் 12 ஆம் நூற்றாண்டுகளில் நடைமுறையில் இருந்த ரோமனெசுக் கட்டிடக்கலைப் பாணியை அடிப்படையாகக் கொண்டு, 19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் கட்டிட வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்ட ஒரு பாணி ஆகும்.[1] வரலாற்றில் முந்திய ரோமனெசுக் பாணியைப் போலன்றி, ரோமனெசுக் மறுமலர்ச்சிப் பாணியின் வளைவுகளும் சாளரங்களும் எளிமையானவை.
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ரோமானெசுக் மறுமலர்ச்சிப் பாணியின் தொடக்ககால வகைகளுள் ஒன்றான "வட்ட-வளைவுப் பாணி" என அழைக்கப்பட்ட வகை செருமனியிலும்[2] 1830க்குப் பின்னர் பிற நாடுகளில் வாழும் செருமன் மக்கள் மத்தியிலும் புகழ் பெற்றிருந்தது. சுதந்திரமான முறையில் ரோமனெசுக் பாணியைப் பயன்படுத்திய முக்கியமானவரும், செல்வாக்கு உள்ளவருமான அமெரிக்கக் கட்டிடக்கலைஞர், என்றி ஆப்சன் ரிச்சர்ட்சன் என்பவர். அமெரிக்காவில் மேற்படி கட்டிடக்கலைஞரால் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்கைளை எடுத்துக்காட்டாகக் கொண்டு உருவான பாணி ரிச்சார்ட்சோனிய ரோமனெசுக் என அழைக்கப்பட்டது.[3]