முதுகுத் தண்டுவட துளையிடுதல்
From Wikipedia, the free encyclopedia
முதுகுத் தண்டுவட துளையிடுதல் (Lumbar puncture) நோயறிதலுக்காகவும் நோய் சிகிச்சைக்காகவும் செய்யப்படும் ஒரு மருத்துவ செயல்முறை. தண்டுவடத்தில் ஊசியின் மூலம் துளையிட்டு உள்ளிருக்கும் மூளைத் தண்டுவட நீரை எடுத்து அதிலிருக்கும் வேதிப்பொருட்கள் நுண்கிருமி உயிர் அணுக்கள் ஆகியவற்றை ஆராய்ந்து அறிய இந்தத் தண்டுவட துளையிடுதல் செயல் முறை பயன்படுகிறது. இந்நீர் அதிகரித்தால் மண்டையக அழுத்தம் (intracranial pressure) ஏற்படும். அவ்வழுத்தத்தைக் குறைப்பதற்காகவும் (சிகிச்சை) இச்செயல் முறை பயன்படுகிறது. இடுப்புப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் அதனை மரத்துப் போகச் செய்யும் மருந்துகளை ஏற்றுவதற்காகவும் இச்செயல்முறை பயன்படுகிறது.
அடித் தண்டுவடத் துளையிடல் | |
---|---|
இடையீடு | |
நரம்பியல் மருத்துவர் ஒருவரால் நோயாளிக்கு அடித் தண்டுவட துளை இடப்படுகிறது. நோயாளியின் முதுகில் சிவப்பு-கருஞ்சிவப்பான சுழிப்புக்கள் அயோடின் சாராயக் கரைசல் (ஒரு கிருமிநாசினி) ஆகும். | |
ICD-9-CM | 03.31 |
MeSH | D013129 |
இத்தண்டுவட நீரில் ஆராய்வதன் மூலம் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் மூளைத்தொற்று. மூளை வீக்கம் காயம் மூளை புற்று போன்றவற்றை அறியலாம். மூளைக் காய்ச்சல் நோயறிய முதன்மையாக பயன்படும் செயல்முறை இது. காரணி அறிய முடியா காய்ச்சலால் அவதிப்படும் குழந்தைகளுக்கு பெரும்பாலும் இதனை மருத்துவர்கள் செய்வர். மூளையின் உறையில் இரத்தக் கசிவு, அதிக நீர் சுரப்பு (hydrocephalus), தான்தோன்று மண்டையக இரத்த அழுத்தம் போன்ற பல நோய்களை கண்டறிய இச்செயல் முறை பயன்படுகிறது. தண்டுவட நீரிலிருக்கும் புற்றுக்கான அணுக்களைக் கொண்டு எவ்வகையான புற்று என்பதனையும் அறியலாம்.
தண்டுவட ஊசி மூலம் அறுவை சிகிச்சைக்கான மரத்துப் போகும் மருந்து செலுத்துவதைப் போலவே புற்றுநோய்க்கான கீமோதெரபியும் செலுத்துகிறார்கள்.