மாக்கேடா
From Wikipedia, the free encyclopedia
மாக்கேடா (Makeda) அல்லது சேபாவின் அரசி (எபிரேயம்:מלכת שבא, அரபு மொழி:ملكة سبأ) பழங்கால இராச்சியமான சேபாவினை ஆட்சி செய்த அரசியாவார். வரலாற்றில், எபிரேய விவிலியம், புதிய ஏற்பாடு, குரான், யாமன் மற்றும் எத்தியோப்பிய வரலாறு, ஜொசீபஸ், யோரூபா முதலியவைகளில் இவர் குறிப்பிடப்படுகின்றார். குரானில் அபேசா என்று அறியப்படுகிறார். இவர் ஆட்சி புரிந்த அரசியாக கருதப்பட்டாலும், இதற்கான வரலாற்றுச் சான்று எங்கும் இல்லை[1]. அரசரின் துணைவியாகவும் இருந்திருக்கலாம்.[1] இவரது இராச்சியம் தற்கால ஏமன் அல்லது எத்தியோப்பியாவாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது[2].